tamilnadu

img

ஊதிய ஒப்பந்த விவகாரம் விரைந்து முடிக்காவிட்டால் வேலை நிறுத்தம்: டி.நரேந்திர ராவ்

சென்னை, செப். 13 - ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை விரைந்து முடிக்க வலியுறுத்தி புதனன்று (செப்.13) சென்னை துறைமுக வாயி லில் தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள 12  துறைமுகங்களில் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் அமலாகி இருக்க வேண்டும். கடந்த 20 மாதங்களாக 4 சுற்று  பேச்சுவார்த்தை நடைபெற்றும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படா மல் உள்ளது. இந்த நிலையில், ஒப்பந்த  பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாடு முழுவ தும் துறைமுக தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுக சிஐடியு, டிடிடபிள்யூயு, எச்எம்எஸ், ஏஐடியுசி, ஐஎன்டியுசி சங்கங்கள்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது நீர்வழிப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலா ளர் டி.நரேந்திரராவ் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்காவிட்டால் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு செல் வோம்” என்றார். இந்தப் போராட்டத்தில் அனைத்து சங்கங்களின் தலை வர்கள் பங்கேற்று பேசினர்.