கடவுள் என்பவர் பல அவதாரங்களை எடுத்திருப்பதாகக் கதைகள் கூறுகின்றன. மனித வடிவத்தில் பல அவதாரங்கள். எத்தனை சக்திமிக்கவராகக் கடவுள் இருந்தாலும் மனித உருவில் வந்தால் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள் என்று சொன்னாலும் நமது சக மனிதர்கள் கொடுந்துயரங்களை எதிர்கொள்பவர்களாக, தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். இவர்களில் 99சதவீதம் பேர் ஏழைகள். அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பு இவர்களுக்கு எதிராக உள்ளது. இதை அடியோடு மாற்றினால்தான் சாதியம் என்ற கொடுமையையும் ஒழிக்க முடியும்.