tamilnadu

img

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை

தூத்துக்குடி, டிச.12- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த ஸ்டெர் லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் தூத் தூக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:  நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அமைதி வழிப் போராட்டத்தில், காவல்துறையால் 13 பேர் சுட்டும், 2 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கடந்த அதிமுக அரசால் நிய மிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெக தீசன் ஆணையம் கடந்த மே-18 ல் தமிழக  அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள் ளது. ஆணையத்தின் அறிக்கையை முழு வதுமாக ஏற்றுக் கொள்வதாக தமிழக சட்ட மன்றத்தில் நிகழ்ந்த வாதத்தின் போது முதல்  வர் அறிவித்தார். “துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்  பட்ட அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற் றப்படுவார்கள்” என்று உறுதியளித்தார். ஆனால் 17.10.22 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில், அமைச்ச ரவை முடிவுப்படி, ஆணையத்தின் பரிந்துரை யில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இது எங்க ளுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேத னையையும் உண்டாக்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, வேலை வாய்ப்பு & வெளிநாடு செல்ல வழக்குத் தடை நீக்கம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும்  தலைவர்கள் மீதும் பதியப்பட்ட 2 வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப் பட்டவர்களுக்கு ரூ.1லட்சம் நிவாரணம் உட்பட பல்வேறு துயர்துடைக்கும் பணிகளை மேற் கொண்டு வருகிறது. மக்களை கொன்றவர்கள் மீதான குற்ற  நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கை யும் ஆணைய அறிக்கை வந்தவுடன் தமிழ் நாடு அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மக்களை படுகொலை செய்தவர்கள் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும் குற்ற வியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படு வார்கள் எனவும், கடந்த அதிமுக அரசின் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பலவீனமானது என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்றப்படும் என்றும் உறுதி யளித்து இருந்தீர்கள்.

தங்களின் வாக்குறுதியை உண்மையா னது, சரியானது, உறுதியாக நடைமுறைக்கு வரும் என்று ஏற்றுக்கொண்டோம். ஆனால், தற்போது கொலை செய்த போலீசார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அமைச்சரவையை மீண்டும் கூட்டி  துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கொன்ற போலீஸார் மீதும், அதற்கு துணை போன  அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியும், சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்  லைட்டை அகற்றி, நீதியை நிலைநாட்டிட வேண் டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், சிபிஎம் சார்பில் மாவட்டச் செயலா ளர் கே.பி. ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பி னர் பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ராஜா, ரவீந்திரன், சண்முகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் எம். எஸ். முத்து, சிபிஐ மாவட்டச் செயலாளர் கரும்பன், ஒருங்கி ணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் வழக்கறிஞர் ஹரிராகவன், ஒருங்  கிணைப்பாளர்கள் பாத்திமா பாபு, கிருஷ்ண மூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர் அகமது இக்பால், மதிமுக ரமேஷ், ஸ்டெர்லைட் போராட்  டத்தில் படுகொலை செய்யப்பட்ட 13 பேரின் குடும்பத்தினர்கள் உள்பட 200-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.