tamilnadu

img

குமரி ஆனந்தன் உடலுக்கு அரசு மரியாதை

குமரி ஆனந்தன் உடலுக்கு அரசு மரியாதை

காங்கிரஸ் மூத்த தலைவரும், தெலுங் கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் (92) புதன்கிழமை காலமானார். சென்னை சாலிகிராமத்தில் அவரது உடலுக்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்  சென்று அஞ்சலி செலுத்தி னார். அவரது உடல் அரசு மரியாதை யுடன் விருகம்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவரைப் பற்றி முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில், “நாடா ளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்த அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி பெருமை கொண்டோம்” என்றார்.  சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அனைத்து உறுப்பினர் களும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல்  தெரிவித்திருக்கின்றனர். பின்னர், அவரது உடல் அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டு கள் முழங்க விருகம்பாக்கம் இடுகாட்டில் எரியூட்டப்பட்டது.