எம்.கோவிந்தன், சி.எஸ்.சுஜாதா, எம்.சுவராஜ், ஜேய்க் சி.தாமஸ், கே.டி.ஜலீல், பி.கே.பிஜூ
காசர்கோடு, பிப்.19- நாட்டுக்கே முன்மாதிரியாக கேரளம் முன்வைக்கும் புதிய வளர்ச்சிக்கான வழிகளை மக்கள் மத்தியில் விளக்கி மற்றொரு அர சியல் அணிவகுப்பு தொடங்கு கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தலைமையிலான இந்த அணிவகுப்பு திங்களன்று (பிப்.20) மாலை 4 மணிக்கு காசர்கோடு மாவட்டம் கும்பளாவில் இருந்து புறப்படுகிறது. 10,000 பேர் பங்கேற்கும் தொடக்கக் கூட்டத்தில் முதல்வர் பின ராயி விஜயன் கட்சிக் கொடியை எம்.வி.கோவிந்தனிடம் ஒப்படைக்கி றார். மத்தியக் குழு உறுப்பினர் சி.எஸ்.சுஜாதா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.சுவராஜ், ஜேய்க்.சி. தாமஸ், சட்டமன்ற உறுப்பினர் கே.டி. ஜலீல் ஆகியோர் பயணக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.கே.பிஜு பயணக் குழுவை நிர்வகிப்பார். இரண்டாவது நாளில், பயணக் குழு தலைவர் கோவிந்தன், பல் வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் உரையாடுகிறார். அரசின் தொடர் வளர்ச்சி, முன் னேற்றம், புகார்கள் மற்றும் தீர்வு திட்டங்கள் அனைத்தும் விவா திக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டில் கேரளாவின் முன்னு தாரணமும் இந்த அணிவகுப்பில் விவாதிக்கப்படும். விரிவான ஏற் பாட்டுக் குழுவினால் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. ஒவ்வொரு மையத்திலும் உள்ளூர் கலைஞர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அணிவகுப்பவர்களை செம் படை தொண்டர்கள் மரியாதை யுடன் வரவேற்றனர். இம்முறை பெண் மற்றும் ஆண் தன்னார்வ லர்களுக்கு ஒரே பங்கு உள்ளது. ஊர்வலம் தொடங்கும் இடத்தில் மாவட்டக் குழுத் தலைமையிலும், மற்ற இடங்களில் அந்தந்த அமைப் புக் குழுவின் தலைமையிலும் வர வேற்பு அளிக்கப்படும் என மார்க சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காசர் கோடு மாவட்டச் செயலாளர் எம்.வி. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களி டம் தெரிவித்தார்.