tamilnadu

img

தரங்கம்பாடி மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்

மயிலாடுதுறை, பிப்.24-  கோடியக்கரை அருகே நடுக்கட லில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தி என்ஜின், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த பி.வேல்முரு கன் (42) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், வேல்முருகன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பி.பாலசுப்பிர மணியன் (39), எம்.அருண்குமார் (27),  எஸ்.மாதவன் (36), அ.கார்த்திக் (32), வி.முருகன் (55) ஆகிய 6 பேரும் பிப்.21 அன்று இரவு தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.  இவர்கள் வியாழனன்று அதிகாலை கோடியக்கரைக்கு கிழக்கே சுமார் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்கள் 6 பேரையும் சரமாரி யாக தாக்கிவிட்டு, படகில் இருந்த  பொருட்களை பறித்துச்சென்றுவிட்ட னர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் வியாழனன்று பிற்பகல் தர ங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர். காயமடைந்த மீன வர்கள் 6 பேரையும், மீனவப் பஞ்சா யத்தார்கள் உள்ளிட்டோர் தரங்கம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி செய்த பின்னர், பொறையார்

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து வேல்முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 மீனவர்களும் மேல் சிகிச்சைக் காக மயிலாடுதுறை அரசு பொது  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து காயமடைந்த மீன வர்கள் கூறுகையில், ‘‘கோடியக் கரைக்கு கிழக்கே நடுக்கடலில் படகில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை  இரும்பு ரோப் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கினர். மேலும் படகிலிருந்து  ஒரு என்ஜின், ஜிபிஎஸ் கருவி, தூண்டில், 2 பேட்டரிகள் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக தெரிவித்தனர். இந்நிலையில், நாகை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் டி.இளம்வழுதி, நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் சங்கர்  ஆகியோர் பொறையார் அரசு  மருத்துவ மனைக்கு வந்து காயமடைந்த மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  இச்சந்திப்பின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் வருவாய் கோட்டாட்சி யர் யுரேகா, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, மீன்வள உதவி இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.