மதுரை, மே 19- மனிதர்களின் அத்தியாவசியப் பொருட் களில் ஒன்று கீரை வகைகள். இவற்றில் பல்வேறு சத்துக்கள் இருப்பதாக பாடப்புத்தகங்களில் மட்டுமல்ல, மருத்து வர்கள் சொல்லியும் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்த கொரோனா காலத்தில் கீரை வியாபாரிகள் அதை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட கீரை விவசாயிகள் உள்ள னர். இவர்கள் கீரைகளை மாட்டுத்தாவணி யில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்றுவந்துள்ளனர். கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய மதுரை மாந கர் காவல்துறை “கீரை விவசாயிகள்” மாட்டுத்தாவணி பக்கமே வரக்கூடாது என நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கீரை வியாபாரிகள் ஒன்றும் பெரிதாகக் கேட்டுவிடவில்லை தினம்தோறும் இரவு பத்து மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை விற்றுக் கொள்கிறோம் என்கின்றனர். மாநகர் காவல் ஆணையரும், மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட காவல்துறை யினரை அழைத்து கீரைகளின் மகத்துவம் குறித்து எடுத்துக்கூறி கீரை வியாபாரிகள் தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். நமது நிருபர்