tamilnadu

img

உலகப் பகையாளி முதலாளித்துவம்; உள்ளூர் பகையாளி மனுஸ்மிருதி

மதுரை, மே 30- நாட்டின் மக்கள் தொகையில் 30 கோடி உள்ள பட்டியல் சாதி யினர் மற்றும் பழங்குடியினர், சனா தன சக்திகளின் ஒடுக்குமுறை மற்றும்  வர்க்க ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட ஓரணியில் திரள வேண்டு மென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திரு மாவளவன் கேட்டுக்கொண்டார். மதுரையில் ஞாயிறன்று ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பினர்’ நடத்திய வகுப்பு, சாதி  ஒழிப்புக் கூட்டத்தில் பேசிய திருமா வளவன், சமுதாயத்தில் சமத்து வத்தை உருவாக்குவதே பெரி யாரியம், அம்பேத்கரியம், மார்க்சியக் கொள்கைகள் என்றார். மேலும் அவர் பேசியதாவது: “இந்தியாவில் ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் என்ற இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன, திரா விடர்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல,  நாடு முழுவதும் உள்ளனர்.  மனு ஸ்மிருதி வர்க்கங்களின் மீதும்  சாதி அமைப்புகள் ( பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்) மீது ஆதிக்கம் செலுத்தியது. மனு ஸ்மிருதியின் பட்டியலில் பட்டியல் சாதிகள், பழங்குடியினர் இல்லை,  மனு ஸ்மிருதியின் கொள்கைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவிலும், தமிழகத்திலும் கெட்டிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் கூறுகையில், நல்லவர்கள் ஆட்சி செய்தால் சட்டம் நிலைத்திருக்கும். கெட்டவர்கள் ஆட்சி செய்தால் சட்டம் நீர்த்துப் போகும் என்றார். இன்றைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டில் தேர்தல் காலங்களில் மட்டுமே செயல்படுகிறது. கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் செயல்பட வில்லை. இன்றுவரை மனு ஸ்மிருதி யின் கொள்கைகள் மட்டுமே கலாச்சார மற்றும் சமூக வாழ்க்கை யில் ஆதிக்கம் செலுத்தி வரு கின்றன. பாஜக ஆட்சியில் அரசிய லமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் துண்டாடப்படுகிறது. சிறுபான்மை மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன.  சாதிகள் நான்கு வர்ணங்களாக வும், வர்க்கம் இரண்டாகவும் (ஆளும் வர்க்கம், உழைப்பாளி வர்க்கம்)  உள்ளது. சாதி என்ற கட்டமைப்பில்  பார்ப்பனீயர்கள் மட்டுமே உயர்வான வர்கள்; மற்றவர்கள் கீழானவர்கள் என வகைப்படுத்தியுள்ளனர். பிரா மணர்களுக்காக மற்றவர்கள் உழைக்கவேண்டும். அடுத்தவர் களின் உடலுழைப்பை நம்பியே அவர்கள் உள்ளனர். நமக்கு உலகப் பகையாளி முதலாளித்துவம். உள்ளூர் பகையாளி (மனு ஸ்மிருதி) பார்ப்பனீயம். பார்ப்பனீயத்தையும் முதலாளித்துவத்தையும் ஒரே நேரத்தில் எதிர்க்க வேண்டும். அறிவியல்பூர்வமாக மார்க்சியம் என்றால் என்ன என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மார்க்சியம் சரி யானது தான் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. 

ஆர்எஸ்எஸ் கொள்கையும் பாஜகவின் கொள்கையும் ஒன்று தான். ஏதாவது பதவி தருகிறேன் எனக் கூறி வஞ்சகத்தால் வளைக்கப் பார்ப்பார்கள். அதில் அவர்கள் சில  நேரங்களில் வெற்றியும்பெறு கிறார்கள். வளைக்க முடியாதவர் களை வன்முறையால் ஒடுக்கு வார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஒரே ஒரு முறை மட்டும் பிரமாணர் அல்லாத வர் தலைமைப் பொறுப்பில் இருந் துள்ளார். அமித்ஷாவும், மோடியும் அதானி-அம்பானியின் ஏவலாளாக செயல்பட்டுவருகின்றனர். அம்பேத்கரியம், பெரி யாரியம், மார்க்சியம் ஆகிய கொள்கைகளின்படி ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பது மக்களிடையே சமத்துவத்தை உருவாக்க உதவும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் நாகை திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள் கட்சி), கொளத்தூர்  மணி (திராவிடர் கழகம்), கோவை ராமகிருஷ்ணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்). திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), எழுத்தா ளர் தியாகு, பேராசிரியர் ஜெயராமன் மற்றும் இரா.அதியமான் (ஆதி தமிழர் பேரவை), கு.ஜக்கையன் (ஆதித்தமிழர் கட்சி), நெல்லை முபாரக் (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)  உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.