tamilnadu

img

நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் இல்லை

திருப்பூர், டிச.1- மோடி பின்பற்றும் பொருளா தாரக் கொள்கைகளே எல்லா தீங்  குகளுக்கும் காரணம். இதற்கு எதிராக பணியில் இருக்கும் ஊழி யர்களும், ஓய்வு பெற்றோரும்  ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். அனைத்திந்திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்  தின் தமிழ் மாநில ஐந்தாவது மாநாடு திருப்பூர் தோழர் எம்.கிருஷ்ணன் நினைவரங்கத்தில்  (ஹார்வி குமாரசாமி திருமண  மண்டபம்) வியாழக்கிழமை தொடங் கியது. தோழர் டி.நாகப்பன் நினைவுக் கொடிக்கம்பத்தில், வரவேற்புக்குழுத் தலைவர் எஸ்.கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றினார். என்சிசிபிஏ கொடியை மாநிலத் தலைவர் எம். கண்ணையன் ஏற்றி வைத்து பொது மாநாட்டுக்குத் தலைமை  வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரங்கசாமி சங்கங் கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் இம்மாநாட் டைத் தொடங்கி வைத்துப் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:  

பழைய பென்சன் என்பது பயன்பாடு உறுதிப்பட்டதாக இருந்தது. ஆனால் புதிய பென்  சன் திட்டம் நிதி உறுதிப்படுத் தப்பட்டதாகும். நமக்கு நிதி  உறுதிப்படுத்தப்பட்ட பென்சன்  தேவையில்லை. புதிய பென்சன்  திட்டத்துக்கு எதிரான போராட் டம் இப்போது கொஞ்சம், கொஞ்  சமாக வலுப்பெற்று வருகிறது.  ராணுவத்தில் கூட நிரந்தர ஆள் எடுக்க மாட்டோம் என  நான்காண்டு ஒப்பந்த பணியா ளர்கள் எடுக்கின்றனர். பணிக்  கொடை, ஓய்வூதியம் தரக் கூடாது என்பதற்கே இந்த முடிவு. ஓய்வூ தியம் என்பதை இல்லாமல் செய்ய வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். அரசுத் துறை, பொதுத்துறை தவிர அமைப்பு சார்ந்த தொழில்  களில் 7 கோடி பேர் இருக்கின்ற னர். அவர்களுக்கு இபிஎப் திட்டத்  தில் குறைந்த அளவு ஓய்வூதியம் தரப்படுகிறது. அதே சமயம் 40 கோடி அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு எந்த சட்டப் பாது காப்பும் இல்லை. நாட்டின் மொத்த உற்பத்தியில் 65 சதவிகிதம் செல்  வத்தை அவர்கள்தான் உற்பத்தி செய்கிறார்கள். 

அவர்களுக்கும் ஓய்வூதியம் வேண்டும். எம்எல்ஏ., எம்.பி.க்  களுக்கு ஓய்வூதியம் தரப்படு கிறது. ஆனால் நாட்டின் செல் வத்தை உற்பத்தி செய்யும் இந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதி யம் இல்லை. ஓய்வூதியம், டி.ஏ., மருத்து வக் காப்பீடு தர மறுக்கின்றனர். முதலாளித்துவ அரசு மனிதர் களை இயந்திரங்களாகப் பார்க் கின்றனர். பயன்பாடு முடிந்ததும் தூக்கி வீசி விட வேண்டும் என  நினைக்கிறார்கள். லாபம் ஒன்றை  மட்டுமே குறிக்கோளாக கொண்ட சமுதாயத்தில் மனிதர்களை மதிப்பதில்லை. உலகில் ஊட்டச்சத்து குறை வான குழந்தைகள் அதிகமுள்ள  நாடு இந்தியா, ரத்த சோகை பெண்கள் அதிகமுள்ள நாடு  இந்தியா. ஆனால் இரண்டாண்டு களில் பெரு முதலாளிகள் சொத்து மதிப்பு ரூ.23 லட்சம் கோடியில் இருந்து ரூ.45 லட்சம் கோடியாக - ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அர சின் கையில் இருக்க வேண்டிய பணம் முதலாளிகள் கையில் இருக்கிறது.

அரசு தன் பொறுப்பில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக  நழுவுகிறது. அடையாளத்துக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு மிகப்பெரிதாக விளம்பரம் செய்கி றார்கள். இது மக்களுக்கு உத வாது. எனவே வலுவான ஒற்று மையைக் கட்ட வேண்டும். தற்  போது வேலை செய்து கொண்டி ருப்போரும், ஓய்வூதியர்களும் இரண்டு கை, இரண்டு கால் களாக இரட்டைக் குழல் துப்  பாக்கியாக இணைந்து நிற்க  வேண்டும். அரசின் பொருளாதா ரக் கொள்கையுடன் சமூகக் கொள்கைகள் இணைந்து இருக்  கின்றன. எனவே எல்லோரும் பெரும் படையாக ஒன்றிணைந்து போராட வேண்டும்.  இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார். இம்மாநாட்டில் அனைத் திந்திய பொதுச் செயலாளர் கே. ராகவேந்திரன் சிறப்புரை ஆற்றி னார். சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் ஆர்.பி.சுரேஷ், கே. மோகன்ராவ், ஆர்.ராஜசேகர், வி.பழனிவேல், ஆர்.சுப்பிரமணி, கே.சண்முகசுந்தரராஜ், ஏஐடி யுசி சி.பழனிசாமி, எல்பிஎப் ஆர். ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலம் முழுவதும் இருந்து  500க்கும் மேற்பட்டோர் இம் மாநாட்டில் பங்கேற்றனர். இரண்டாவது நாளாக வெள்ளிக் கிழமையும் இம்மாநாடு நடை பெறுகிறது. இதில் புதிய நிர்வாகி கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள னர்.