மதுரை, மே 12- மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து குறைதீர்ப்பா ளர் நியமிக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்து வது தொடர்பான புகார்களை தீர்ப்ப தற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் என 37 குறை தீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வழங்கப்படும் இழப்பீடு. பணித்தள வசதிகள் உள்ளிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடர்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள், அலுவலகத்தில் அல்லது களஆய்வின் போது குறைகேள் அலுவலரிடம் பதிவு செய்யலாம். விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களும், குறைகேள் அலுவலரால் புகார் பெற்ற நாளிலிருந்து, 15 நாட்களுக் குள் முடிக்கப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்கப் படுகிறது. குறைகேள் அலுவலரால் குறைகள் கையாளப்பட்ட விதம், பணிகளின் தரம் பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடு களை மேம்படுத்துவதற்கான பரிந்துரை கள் போன்றவை அறிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வலைதளத்தில் வெளியிடப்படும். குறைதீர்ப்பாளர்களின் பெயர் மாவட்டம் உட்பட மதுரை: பி.பாலசுப்ர மணியன்- 8925811315, விருதுநகர்: வி.பெரியசாமி- 8925811346, திண்டுக்கல்: சி.ஓம்பிரகாஷ்- 8925811306, தேனி: கே.சந்திரசேகரன்-8925811328, சிவகங்கை: யு.பிரபு-8925811324, இராமநாதபுரம்: பி.ராமமூர்த்தி-8925811321