tamilnadu

img

மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

சென்னை, அக்.2 - மது விலக்கை தேசிய கொள்கை யாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற  வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கள் நடத்திய மாநாட்டில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மது - போதைப் பொருள் ஒழிப்பு  மகளிர் மாநாட்டை புதனன்று (அக்.2) உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத் தைகள் கட்சி நடத்தியது. மாநாட்டிற்கு தலைமை வகித்து, விசிக தலைவர்  தொல்.திருமாவளவன் தீர்மானங்களை  முன்மொழிந்தார். அதன் சுருக்கம் வருமாறு: தமிழ்நாடு உட்பட தேசிய அளவில்  முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய மதுவிலக்குச் சட்டம்  இயற்ற வேண்டும். மதுவிலக்கை அமல் படுத்தும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய  அரசு இழப்பீடு மற்றும் கூடுதல் நிதிப் பகிர்வு வழங்க வேண்டும். போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக் கைக்கு தமிழ்நாட்டிற்கு 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மனிதவள பாதிப்பை ஆய்வு செய்ய மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். மதுபான கடை களை மூடுவதற்கான கால அட்ட வணையை வெளியிட வேண்டும். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். மது மற்றும் போதைப் பொருள்  ஒழிப்பு பரப்புரை இயக்கத்தை அரசு தொடங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனை களிலும் போதை மீட்பு மையங்களை உருவாக்க வேண்டும். குடி மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தை வட்டார அள வில் தொடங்க வேண்டும். அய்யா வை குண்டரின் பிறந்த நாளில் மதுக்கடை களை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட  13 தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொ டர்பாளர் குழுத்தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், பால.பிரஜாபதி அடி களார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் பொதுச்  செயலாளர் ஆனிராஜா, ஆர்.சுதா எம்.பி., விசிக பொதுச் செயலாளர்கள் ம. சிந்தனைச் செல்வன். து.ரவிக்குமார், மகளிர் விடுதலை இயக்க மாநிலச் செய லாளர் இரா.நற்சோனை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.