tamilnadu

img

முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, மே 7 - புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திற னாளிகள் உதவித்தொகைக்கான சிறப்பு முகா மினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.  இம்முகாமில், முதியோர் உதவித்தொகை வேண்டி 112, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை வேண்டி 28, விதவை உதவித்தொகை வேண்டி 8, மகளிர் உரிமைத் தொகை வேண்டி  28 மனுக்களும் என மொத்தம் 176 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அமைச்ச ரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தொடர் புடைய அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார்.  பின்னர், துளையானூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ.2.65 கோடியில் 1,500 மெ.டன் கொள்ளளவுடன் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் கிடங்கு கட்டுமானப் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.