தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில், டி20 போட்டி களில் ஒரு போட்டி மழையால் ரத்தாக, இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமனில் முடிந்தது. இதை யடுத்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால், டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் வெறும் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், தென்னாப்பிரிக்காவின் முதுகெலும்பை இந்திய வீரர் முகமது சிராஜ் முறித்தார். இவர் 9 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி, 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியின் வீழ்ச்சியால், 2-ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்தது. இதில், ஆட்ட நாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
யார் இந்த சிராஜ்?
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு (1994, மார்ச் 13) ஒரு இஸ்லா மியர் குடும்பத்தில் பிறந்தவர் முகமது சிராஜ். தந்தை முகமது காஸ், தாய் ஷபானா பேகம். ஆட்டோ ஓட்டுநர். தாய் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண். சகோதரர் முகமது இஸ்மாயில். ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் தனது மகன் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான தியாகங் கள் செய்தனர் பெற்றோர். 7 வயதில் இருந்து கிரிக்கெட் விளை யாடுவதில் ஆர்வமாக இருந்தார் முகமது சிராஜ். ஆனாலும், குடும்பத்தின் வறுமை அவரை துரத்திக் கொண்டே இருந்தது. முறையாக பயிற்சி பெற வேண்டும் என்று நினைத்தாலும் அவரது குடும்பப் பின்புலம் அதற்கு ஒத்துழைக்க முடியவில்லை. வாழ்க்கையே கிரிக்கெட்! கிரிக்கெட் பந்தில் வேகமாக வீச தொடங்கிய அவர், முதன் முதலாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தனக்கென்று ஒரு அடை யாளத்தை உருவாக்கினார். அந்த ஆட்டத்தில் அவரது திறமையை பாராட்டி ரூ.500 பரிசாகவும் வழங்கப்பட்டது. அன்று முதல் தனது வாழ்க்கையே கிரிக்கெட் தான் என்பதை முடிவு செய்தார் முகமது சிராஜ். தனது 21 ஆவது வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சித் கோப்பைக்கு தேர்வானார். சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரின் டி 20 ஓவர் போட்டிதான் முகமது சிராஜை வேகப்பந்து வீச்சாளராக அறிமுகம் செய்தது. 2016-17 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பைத் தொடரில் ஹைதராபாத் அணிக்காக களம் இறக்கப்பட்ட சிராஜ் 41 விக்கெட்டுகளைவீழ்த்தினார்.
தந்தையின் கனவு!
இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு நியூசி லாந்து சென்ற இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சிராஜ், 20 ஓவர் போட்டி யில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தி தனது அத்தியாயத்தை துவக்கினார். தனது சிறப்பான பந்துவீச் சால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலும் களம் இறக்கப்பட்டார். 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முகமது சாமிக்கு காயம் ஏற்பட, மாற்று வீரராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சிராஜின் தந்தை முகமதுகயாஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்த செய்தி கிடைத்தது. ஆனால், தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில், இறுதிச் சடங்கிற்கு செல்லாமல், இந்திய அணிக்காக விளையாடி னார். சிராஜின் இந்த செயலுக்கு கேப்டன் கோலி, பயிற்சி யாளர் ரவி சாஸ்திரி, அணி நிர்வாகம் முழு ஆதரவு கொடுத்தனர்.
உலக ஹீரோவாக...
இன்றைக்கும் முகமது சிராஜ் குடும்பத்திற்கு பொருளா தாரத் தேவை அதிகம் உள்ளது. இருந்தாலும், ஆசிய கோப்பையில் தனக்கு கிடைத்த பரிசுத் தொகை 5 ஆயிரம் டாலர் (ரூ.4.15 லட்சம்) இலங்கை மைதானத்தை மழை என்றும் பாராமல் இரவு பகலாக வடிவமைத்து, செம்மைப்படுத்தி, பாதுகாத்த ஊழியர்களுக்கு வழங்கினார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மைதான ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். முகமது சிராஜின் இந்த உயர்ந்த பண்பு அவரை உலக ஹீரோவாக்கியது.