tamilnadu

img

ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறக் கோரி கையெழுத்து!

தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஒருகோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறுகிறது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கையெழுத்து பெற்றார். இந்நிகழ்வின்போது மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், பொருளாளர் செந்திலதிபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.