சென்னை, ஜூன் 3- கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து அந்த ரயிலில் பயணித்து உயிர் தப்பிய வர்கள் அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வெள்ளிக்கிழமை மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின், பாலசோர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெட்டிகள் தண்ட வாளத்தில் இருந்து விலகி அருகி லுள்ள மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது யாரும் எதிர் பாராத விதத்தில் அடுத்த சில நிமிடங்களில் அதே வழியில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக உள்ளூர் மக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்பு பணியில் தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படை யினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விடிய விடிய நடந்த இந்த மீட்பு பணியில் இதுவரை 280 பேர் பலியாகி யுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர்.
விபத்துகுள்ளான ரயில் வண்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 100 பேர் வரை பயணம் செய்ததாகவும், இதில் 30 பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய 3 பேர், விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி, ராமநாத புரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சனிக்கிழமை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: கோரமண்டல் ரயில் வண்டியில் பி 8 பெட்டியில் பயணித்திருந்தோம், எங்களுக்கு முன்னால் இருந்த பெட்டிகள் தடம் புரண்டு பெரிய விபத்து ஏற்பட்டது. ஆனால் நான் இருந்த பெட்டியில், பெரியளவு பாதிப்பு ஏற்பட வில்லை. ரயில் வண்டி குலுங்க மட்டுமே செய்தது. விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை இருந்ததால் அங்கிருந்து நடந்து வந்து பேருந்து மூலம் புவனேஸ்வர் அடைந்தோம். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தோம். தமிழ்நாடு அரசு சார்பிலும் ரயில்வே நிர்வாகம் சார்பிலும் தொலைபேசி மூலமாக தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்ததாக அவர் தெரி வித்தார். நாகேந்திரன் கூறுகையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உள்ளூர் மக்கள் பெரும் உதவியாக இருந்தார் கள். மீட்பு குழுவினர் வருவதற்கு முன்பாகவே உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர் என்றார்.