மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே உள்ளது தாராவி பகுதி. ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசை குடியிருப் புப் பகுதியான தாரா வியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த தாராவி பகுதியை அதானிக்கு தாரை வார்த்துள்ளது மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு. “தாராவி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை இடித்து அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று வீடுகள் வழங்கப்படும்” என்று அதானி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், “தாராவியை அழித்து மும்பையை அதானி நகரமாக மாற்ற விடமாட்டோம்” என “இந்தியா” கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சி எச்சரிக்கை விடுத்துள் ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலை வரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்கள் சந்திப்பில், “தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்ட டெண்டரை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம். தாராவியில் வாழும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்வோம். தேவைப்பட்டால் புதிய டெண்டரை வழங்குவோம். ஆனால் ஒரு போதும் தாராவியை அழித்து மும்பை யை அதானி நகரமாக மாற்ற விடமாட் டோம். டெண்டரை ஏன் இப்போது ரத்து செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். தாராவி குடியிருப்பா ளர்கள், வணிகங்கள் அடியோடு அகற்றப் படாமல் இருப்பதை எனது கட்சி உறுதி செய்யும். தாராவியில் தங்கியிருக்கும் மக்களுக்கு அந்த வட்டாரத்திலேயே 500 சதுர அடி வீடுகள் வழங்கப்பட வேண்டும்” என அவர் கூறினார்.