tamilnadu

img

மகா விகாஸ் அகாதி கூட்டணியிலிருந்து வெளியேறி வருவதற்கு தயார்!

மும்பை, ஜூன் 23 - “மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேற நாங்கள் தயாராக உள்  ளோம்” என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார். “ஆனால், அதற்கு முன்னதாக கட்சி யின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மும்பைக்கு வர வேண்டும்” என்றும் சஞ்சய் ராவத் நிபந்தனை விதித்துள்ளார். பாஜக-வின் வழக்கமான தில்லுமுல்லு வேலைகளால், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசு எப்போது வேண்டு மானாலும் கவிழலாம் என்ற சூழல் ஏற் பட்டுள்ளது. ஆளும் சிவசேனாவுக்கு எதிராக, அந்தக்  கட்சியின் எம்எல்ஏ-க்கள் 35 பேரை பாஜக  தன்பக்கம் வளைத்திருப்பது தெரியவந் துள்ளது. இவர்களோடு சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேரும் பாஜக-வுக்கு ஆதர வாக திரும்பியுள்ளனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவ சேனாவிற்கு 55 எம்எல் ஏ-க்கள், தேசியவாத  காங்கிரசிற்கு 53 எம்எல்ஏ-க்கள் காங்கிர சிற்கு 44 எம்எல்ஏ-க்கள் என இருந்தனர். இவர்களுடன் 8 சுயேட்சைகளும் ஆதரவு  அளித்ததால் 160 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன்  மகா விகாஸ் கூட்டணி அரசு நடந்து வந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்  வராக இருந்து வந்தார். பாஜக 106 எம்எல்ஏ க்கள் பலத்துடன் இருந்து வந்தது. 

தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமை யில் சிவசேனா எம்எல்ஏ-க்கள் 35 பேர் பாஜக வுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதால், பாஜக  ஆதரவு எம்எல்ஏ-க்களின் பலம் அதிகரித் துள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 144 எம்எல்ஏ-க்கள்  தேவை என்ற நிலையில், அந்த எண்ணிக்கை யை பாஜக ஏறக்குறைய பெற்று விட்டது. எனினும், சிவசேனா எம்எல்ஏ-க்கள்  கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் பதவி பறிப்புக்கு உள்ளாகலாம் என்பதால், பாஜக  நினைத்தபடி புதிய ஆட்சி அமைக்க இயலா மல் தாமதமாகிறது.  சிவசேனாவுக்கு 55 எம்எல்ஏ-க்கள் உள்ள நிலையில், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்கள் விலகினால் மட்டுமே தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கோர முடியும். அதற்கு 37 எம்எல்ஏக்  கள் வேண்டும். தற்போது 35 எம்எல்ஏ-க்களே  உள்ளனர். எனவே, பேரம் மூலம் மேலும்  இன்னும் சில எம்எல்ஏ-க்களை இழுக்க  முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதுவரை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா எம்எல்ஏ-க்களை தங்களின் பாது காப்பிலேயே வைத்திருக்க முடிவு செய்தி ருப்பதாக கூறப்படுகிறது.  முதலில் சிவசேனா எம்எல்ஏ-க்களை குஜ ராத் மாநிலம் சூரத்திலுள்ள லீ மெரிடியன் ரிசார்ட்டில் தங்கவைத்த பாஜக, பின்னர்  அசாம் மாநிலம் ரேடிசன் புளூ ஹோட்ட லுக்கு கொண்டு சென்றது. தற்போது அங்கி ருந்து கோவா கொண்டு செல்ல முடிவு செய்  துள்ளது.

இதனிடையே, “ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்ற எம்எல்ஏ-க்கள் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வருகிறது. அதிருப்தியாளர்களில் யாரா வது நான் முதல்வராக தொடர்வதில் விருப்ப மில்லை என்று கூறினால் நான் இப்போதே பதவியை ராஜினாமா செய்துவிடத் தயார். சிவசேனாவையும் இந்துத்துவாவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடி தத்தை தயார் நிலையில் வைத்துள்ளேன். நான் ராஜினாமா செய்தால், எனக்குப் பிறகு சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராக வந்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று முதல்  வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். அத்துடன், மகாராஷ்டிர முதல்வரின்  அதிகாரப்பூர்வ இல்லமான ‘வெர்ஷா’வை யும் உத்தவ் தாக்கரே காலி செய்துள்ளார். தனது குடும்பம் மற்றும் உடமைகளுடன், தனது சொந்த பங்களாவான ‘மாதோ ஸ்ரீ’க்கு தாக்கரே குடிபெயர்ந்தார். மறுபுறத்தில், பாஜக பேரத்திற்கு அடி பணியவில்லை என்பதை காட்டிக் கொள்வ தற்காக, ஏக்நாத் ஷிண்டே, “மகா விகாஸ்  அகாதி கூட்டணியில் சிவசேனா தொடர்வது மட்டுமே தங்களுக்குப் பிரச்சனை. அத னால்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்று  தொடர்ச்சியாக கூறி வந்தார். “மகா விகாஸ் அகாதி கூட்டணியிலி ருந்து சிவசேனா விலக வேண்டும் என்பதே  எங்களின் கோரிக்கை. ஏனெனில் இந்த கூட்டணி மூலமாக சிவசேனா தனது இந்துத்  துவா கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டது; இப்போதும் நாங்கள் பால்தாக்கரே வின் சீடர்கள்தான்” என்றும் தெரிவித்து வந்தார். இதையடுத்து, மகா விகாஸ் அகாதி கூட்ட ணியிலிருந்து வெளியேறத் தயார் என்று சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி.  அறிவித்துள்ளார். ஆனால், 24 மணிநேரத்திற்  குள் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மும்பைக்கு  வரவேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.