tamilnadu

img

உத்தவ் ஆட்சிக் கவிழ்ப்பு நீண்டகாலத் திட்டம்; மோடி, அமித்ஷா எனக்கு துணையாக நின்றனர்!

மும்பை, ஜூலை 5 - உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்த்தது, திடீர் நடவடிக்கையல்ல; அது நீண்டகால திட்டம் என்று பாஜக தயவுடன் மகாராஷ்டிர முதல்வ ராகி இருக்கும் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். அத்துடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தனக்கு  துணையாக நின்றார்கள் என்றும் உண்மை களைப் போட்டு உடைத்துள்ளார். திங்களன்று மகாராஷ்டிர சட்டப்பேரவை யில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பின், ஆற்றிய உரையில் இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டே மேலும் கூறியிருப்பதாவது: பாஜக - சிவ சேனா கூட்டணி ஆட்சியில்,  எனக்கு துணை முதல்வர் பதவி வழங்குவ தாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனக்கு விரைவில் நல்ல பதவி கிடைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியும் என்னிடம் தெரிவித்தார். முந்தைய அரசில் அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு அளித்த தேவேந்திர பட்னாவிஸ்-ஜிக்கு  இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். 2019-ஆம் ஆண்டும் சிவ சேனாவுக்கு (எனக்கு) துணை முதல்வர் பதவியை அவர் வழங்க இருந்தார்.  பின்னர் மகா விகாஸ் அகாதி கூட்டணி உரு வானது. அப்போது, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள் ஷிண்டே-வின் கீழ் பணியாற்ற விரும்பவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்ததாக உத்தவ் தாக்கரே என்னிடம் கூறினார்.

ஆனால் ‘மகா விகாஸ் அகாதி’ அரசு அமைந்த பிறகு, உங்கள் சொந்தக் கட்சியில் (சிவசேனா) மோதல் நடந்ததாகவும், நீங்கள் முதல்வராக வருவதை நாங்கள் (தேசியவாத காங்கிரஸ்)ஒருபோதும் எதிர்க்கவில்லை என்று என்னிடம் அஜித் பவார் தெரிவித்தார்.  எனவே, இன்றைய நிகழ்வுகள் (உத்தவ்  அரசைக் கவிழ்த்தது) ஒரே நாளில் நடந்தவை  அல்ல. நான் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டிருக் கிறேன். நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பதை  நேரில் பார்த்தவர்கள் இந்த அவையில் உள்ள னர். சுனில் பிரவும் (உத்தவ் தாக்கரே ஆதரவு  சிவசேனா எம்எல்ஏ) ஒரு சாட்சி. இறுதியாக கடந்த ஜூன் 20-ஆம் தேதி எம்எல்சி தேர்தலில் கட்சியால் எனக்கு கிடைத்த  அவமரியாதை என்னை கட்சிக்கு எதிராக தூண்டியது. இனி கட்சி பக்கம் திரும்பக் கூடாது என்று தீர்மானித்தேன். எம்.எல்.ஏ.க்களுடன் போலீஸ் சோதனை சாவடிகளை தாண்டி எப்படி  செல்வது என்பது எனக்கு தெரியும். செல்போன்  டவர்களைக் கண்டறிவது மற்றும் ஒரு நபரை கண்காணிப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக (தனது வலது பக்கம் அமர்ந்திருந்த பட்னாவிசை சுட்டிக் காட்டி) மிகப்பெரிய வித்தகர் இவர்தான். கவுகாத்தி ஹோட்டலில் எனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் அயர்ந்து தூங்கிய பிறகு நான் குஜராத் செல்வேன். அங்கு பட்னாவிசை சந்தித்துப் பேசுவேன். எம்எல்ஏ-க்கள் எழுந்திருக்கும்  முன்பே அதிகாலையில் கவுகாத்தி ஓட்ட லுக்கு திரும்பி விடுவேன். எல்லாவற்றையும் ஒருக்கிணைத்தவர் (பட்னாவிஸ்) இங்கே இருக்கிறார். இவர் என்ன செய்வார், எப்படி செய்வார் என்று யாருக்கும் தெரியாது.  எல்லவாற்றையும் விட எங்கள் (அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ-க்கள்) எண்ணிக்கை பாஜக- வை விடக் குறைவாக இருந்தது. ஆனாலும் பதவி ஏற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி  எங்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக என்னிடம் தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா எங்களுக்கு பின்னால் ஒரு பாறையை போல நின்று ஆதரவளிப்பதாக கூறினார்” இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார். 

;