tamilnadu

img

ஷாலிமார் விரைவு ரயில் தடம் புரண்டது

மோடி அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கையா லும், தனியார் மய மாக்கும் முனைப்பி லும் ரயில்வே துறை க்கு ஒதுக்கப்படும் நிதி வெகுவாக குறைக்கப்பட்டுள் ளது. இதனால் ரயில் வே பராமரிப்புச் செலவுக்கே திண் டாடி வருகிறது. தற் போதைய சூழலில் நாட்டில் ரயில்கள் விபத்தில் சிக்கும் செய்தி வருவது சகஜ மான விஷயமாக மாறிவிட்டது. வாரந் தோறும் ரயில் விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.  இந்நிலையில், மேற்கு வங்கத்தின் ஹவுரா அருகே கரக்பூர் பிரிவில் உள்ள நல்பூர் ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்த செகந்திராபாத் (தெலுங்கானா) - ஷாலிமார் (மேற்கு வங்கம்) அதிவிரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் சனியன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.  எனினும் ஹவுரா மண்டலத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. ரயில்வே துறை துரிதமாக செயல் படாததால், மேற்கு வங்க மாநில அரசு ரயில் விபத்தில் சிக்கி தவித்த பயணிக ளை கொல்கத்தாவிற்கு பேருந்துகள் மூலம் அழைத்து வந்தது.