காலடி: காலடி ஸ்ரீ சங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழக தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் அனைத்து இடங்களிலும் போட்டியின்றி தேர்வு பெற்றது. பன்மனா வட்டார மையத்தின் மலையாளத் துறை முதுகலை மாணவி எஸ்.ஜி.சரிகா தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் பி.வி.அஞ்சனா (பையன்னூர் மையம்), பொதுச் செயலர் ஜெ.ஸ்ரீகுமார் (முதன்மை மையம், காலடி), இணைச் செயலர் (மகளிர்) எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி (முதன்மை மையம் காலடி), இணைச் செயலர் ஆர்.விஷ்ணு (திருவனந்த புரம்). செயற்குழு உறுப்பினர்களாக ஐ.வி.அபிநந்த் (திரூர்) மற்றும் பி.எம்.அஷ்வந்த் (கோழிக்கோடு) ஆகி யோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.