சென்னை, டிச.29- அரசு அலுவலகங்கள் அனைத்தி லும் புகார் குழுவை அமைக்க வேண் டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா வலி யுறுத்தி உள்ளார். பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை யன்று (டிச.28) சென்னையில் மண் டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பொதுச்செய லாளர் அ.ராதிகா பேசியதாவது: சென்னை மற்றும் புறநகர் மாவட் டங்களில் ஏராளமான தொழிற் சாலைகள் உள்ளன. இவற்றில் பணி யாற்றும் பெண்களுக்கு சட்ட, சமூக பாதுகாப்பு இல்லை. பாலியல் துன்பு றுத்தல் வழக்குகளில் தொடர்ச்சி யாக நீதி மறுக்கப்படுகிறது. குறிப் பாக பணியிடங்களில் பாலியல் வன் முறை அதிகரித்துள்ளது. அரசு அலு வலகங்களில் கூட புகார் குழு இல்லை. புகார் குழு அமைக்கப்பட்ட இடங்களில் அவை செயல்படுவ தில்லை. அண்ணா பல்கலைக்கழக விவ காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ணின் தகவல்கள் வெளியான விவ காரத்தில் காவல் துறையையும், அர சையும் கண்டிக்கிறோம். பொள் ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்ற வாளிகளுக்கு ஆதரவாக செயல் பட்ட அதிமுக இந்த பிரச்சனையில் போராட்டம் நடத்துகிறது. ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை குறித்து பேச மறுக்கும் பாஜக தலைவர் அண்ணா மலை, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நாடகமாடுகிறார். பெண்கள் மீதான வன்முறை களை தடுக்க முதலில், அரசு அதி காரிகளுக்கும், காவல்துறைக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் புகார் குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேராசிரியர் சுந்தரவள்ளி பேசு கையில், நீதிமன்றத்தில் கூட பெண் நீதிபதிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. நீதிமன்றங்கள் நீதி யை வழங்குவதற்கு மாறாக தீர்ப்பு களை வழங்கிக் கொண்டிருக் கின்றன. பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை தடுக்க வேண்டும். ஏஐ, செல்போன் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பெண் களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் கூட புகார் குழு இல்லை. எனவே, அனைத்து பணியிடங்களில் புகார் குழுவை அமைக்க வேண்டும் என்றார். இந்த மாநாட்டில் மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநில பொருளாளர் ஜி.பிர மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.