tamilnadu

img

மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் எஸ்.ராஜப்பா காலமானார்

சென்னை, அக். 23 - தொழிற்சங்க பணியாற்று வதில் தளராத தாகம் கொண்ட வர் தோழர் எஸ்.ராஜப்பா என்று சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் புகழாரம் சூட்டினார். தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கம், சென்னை காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் ஆகிய வற்றின் தலைவர், பொதுச் செய லாளர், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர் தோழர் எஸ்.ராஜப்பா. 1996ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பிறகு, சிஐடியு- வுடன் இணைந்த மருத்துவ மனை, கிளப், ஓட்டல் ஊழி யர் சங்கங்களுக்கும் தலை மையேற்று வழி நடத்தினார். உடல் நலம் குன்றியிருந்த அவர், ஞாயிறன்று (அக்.23) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. அன்னாரது உடல் மலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன், துணைப் பொதுச்செய லாளர் எஸ்.கண்ணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஏ.பாக்கியம், கே.சுவாமி நாதன், வே.ராஜசேகரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), சிஐடியு துணைத் தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கள் பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை), சி.திரு வேட்டை (மத்தியசென்னை), மலர் மருத்துவமனை இயக்குநர் சந்திரசேகரன், தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செய லாளர் டி.செந்தில்குமார், சென்னை காப்பீட்டு ஊழியர் சங்க சென்னை பகுதி-1ன் நிர்வாகிகள் ஆர்.ஜெயராமன், எஸ்.ரமேஷ்குமார், சென்னை பகுதி-2ன் நிர்வாகிகள் ஜானகி ராமன், மனோகர், மலர் மருத்துவமனை ஊழியர் சங்க தலைவர்கள் ஐ.ஆர்.ரவி, மோகன் சிங், தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க அகில இந்திய தலைவர் ரமேஷ் சுந்தர், நீர்வழிப் போக்கு வரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் நரேந்திர ராவ் உள்ளிட்டு பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அன்னாரது உடல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அங்கு நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.
எதிர்பார்ப்புகளை விஞ்சிய தலைவர்
அப்போது பேசிய சிஐ டியு மாநிலத் தலைவர்அ.சவுந்தரராசன், “மருத்துவ மனை, கிளப் போன்ற இடங்களில் தொழிலாளர்க ளின் உரிமைக்காக கடுமை யான போராட்டங்களை நடத்த முடியாது; உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் முடியாது. அத்தகைய கடுமையான தொழிற்சங்க பணிக்கு அவரை தேர்ந்தெடுத்து பணி யாற்ற வைத்தோம். சிஐடியு எதிர்ப்பார்ப்பை விஞ்சி அவர் செயலாற்றினார். அவர் பொறுப்பேற்ற பிறகுதான் மருத்துவமனை, கிளப் தொழி லாளர்கள் நல்ல ஊதியத்தை பெற முடிந்தது” என்றார். “தொழிற்சங்கத்தில் நேர்மை, உறுதியான நிலைப் பாடு, அரசியல் சமரசமின்மை, சல்லி காசு என்றாலும் தொழிலாளர் உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதி அவரிடம் இருந்தது” என்றும் அவர் புகழஞ்சலி செலுத்தினார்.