சென்னை,பிப்.28- ‘கலைஞர் எழுதுகோல்’ விருதுக்கு மூத்த பத்திரிகை யாளர் மதுரை வி.என்.சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிய நீண்ட அனுபவங்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றிய தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் எழுது கோல்’ விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்திருக்கிறார். விருது பெறும் சாமிக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றுவழங்கப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் வி.என்.சாமி பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றவர். இவர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர். 9.6.1931 அன்று பிறந்தவர். 92 வயதானவர். இளமையில் தந்தை பெரியாரின் உதவியாளராகத் திகழ்ந்தவர். தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியபின் 1968-இல் தினமணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி, தலைமைச் செய்தி யாளராக உயர்ந்து 1989 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய “புகழ்பெற்ற கடற்போர்கள்” என்னும் நூல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தமிழ்நாட்டின் ‘வால்ட் விட்மன்’ என்று வி.என்.சாமியை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.