tamilnadu

img

மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த நீதிபதியின் கருத்துக்கள் நீக்கம்

சென்னை,அக்.17- அண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர் பான வழக்கு விசாரணை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடை பெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்ச னிடம் மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணி யன் கடுமையாக நடந்து கொண்ட தாகக் கூறப்படுகிறது. இதற்கு  சக வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அகில இந்திய பார் கவுன்சில், கர்நாடக பார்கவுன்சில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங் களும், வழக்கறிஞர்களை கண்ணி யக் குறைவாக நடத்துவதாக உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி வரை கடிதம் அனுப்பியிருந்தனர். இது குறித்து நெறிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்த மனு மீதான விசா ரணை நீதிபதிகள் ஆர். சுப்பிர மணியன், விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.என்.பி.எஸ்.சி.  சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, இந்த வழக்கி லிருந்து நீதிபதி விலகவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கேட்கவில்லை என்றும், நீதி மன்றத்தின் மேல் உரிய மரியாதை வைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மனுதாரர்கள் சொல்வதையே நீதிமன்றத்தில் கூற முடியும் என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நீதிமன்ற காட்சிகள் வெளியானது குறித்து சைபர் கமிட்டி விசாரணை நடை பெற்று வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரித்து வருவதாக தெரிவித்தார். யார் பதிவு செய்தார்கள் என்பதை ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடலாம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்த வீடியோ காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துகள் நீக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், இந்த  வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டிய லிட, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.