tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்

அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி அந்த நிகழ்ச்சியை செங்கோட்டை யன் புறக்கணித்தார். மேலும் அதிமுகவின் நிலைமை குறித்து செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பினார். சசி கலாவின் தூண்டுதலில்தான் செங்கோட்டையன் இப்படி பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், அதிமுக வில் உள்ள 82 மாவட்டங் களுக்கான பொறுப்பாளர் களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று அறிவித்தார்.

அதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. அதே போல இதுவரை ஒதுங்கி இருந்த அதிமுக தலைவர்கள் பலரது பெயரும் கூட அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மாவட்டச் செயலாளராக இருக்கக் கூடிய எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் பெயர் மட்டும் இடம்பெறவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் வெளியேற்றப்படுகிறாரா? என கேள்வி கிளம்பியுள்ளது.