tamilnadu

img

சிவந்தது திருப்பூர் - புரட்சியை நெஞ்சில் ஏந்தி செந்தொண்டர் அணிவகுப்பு

திருப்பூர், நவ.27- மனித குலத்தின் சோசலிசக் கனவை சாத்திய மாக்கிய நவம்பர் புரட்சி தினத்தின் 105 ஆவது  ஆண்டு செந்தொண்டர் பேரணி கோலாகலமாக திருப்பூரில் நடைபெற்றது.  திருப்பூர் மக்களின் வியந்து பார்க்கும் வகையில் பெரும் எழுச்சியுடனும், கம்பீரத்தோ டும் சிறப்பாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர்  மாவட்ட குழு அலுவலகமான தியாகி பழனி சாமி நிலையம் முன்பிருந்து இந்த பேரணி தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் செங்கொடியை ஏற்றி வைத்து பேரணியை தொடக்கி வைத்தார். இந்தப் பேரணியில் பிருந்தா காரத், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி சுகுமாரன், கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என். பாண்டி, மாவட்டச் செயலாளர் செ. முத்துகண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, இடைக்குழு செயலாளர்கள் உறுப்பினர்கள் கட்சி அணியினர் சிவப்பு சீருடைகள் குடும்பம் குடும்பமாக பங்கேற்று அணிவகுத்தனர். சோசலிச சோவியத் புரட்சியின் மகத்து வங்களையும், முதலாளித்துவத்தின் கொடுமை களையும், மோடி அரசின் நாசகர கொள்கை களால் விவசாயம் தொழில்கள் மக்கள் வாழ்வு  கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைக்கும் மாற்று கொள்கைகளையும் முழக்கங்களாக எழுப்பிய படி அனைவரும் அணிவகுத்து சென்ற னர்.

பேரணியின் முகப்பில் செந்தொண்டர்கள் மிடுக்கோடு அணிவகுத்துச் சென்றனர். எதிர் கால தலைமுறை உள்ளிட்ட குழந்தைகளும் கம்பீரமாக முழக்கம் எழுப்பி அணிவகுத்து சென்றது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. குழந்தைகளின் சிலம்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம், கேரள பாரம்பரிய குடைகளை சிவப்பு  வண்ணத்தில் ஏந்திய படியும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட உலகத் தலைவர்களையும், மார்க்சிஸ்ட் கட்சி யை தோற்றுவித்த சுந்தரையா, இ எம் எஸ், பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி, ஜோதி பாசு, சுர்ஜித் உள்ளிட்ட நவரத்தின தலை வர்களையும், உதிரம் சிந்திய ஆசர்மில் பழனிச்  சாமி, சீராணம்பாளையம் பழனிச்சாமி, கேத்தம்  பாளையம் பன்னீர்செல்வம், இடுவாய் ரத்தின சாமி உள்ளிட்ட தியாகிகளையும் நெஞ்சில் ஏந்தி யதை குறிக்கும் வகையில் அவர்களது உரு வப்படங்களை ஏந்தி வந்தனர். இந்தப் பேரணி ராம்நகர் சந்திப்பில் இருந்து  பெருமாநல்லூர் சாலை, ரயில்வே மேம்பாலம், வழியாக குமரன் சாலை, யுனிவர்சல் திரை யரங்க அருகே உள்ள பொதுக் கூட்டத் திடலை அடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீக்க திர் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சியும் தலை வர்கள் உரையும் இடம் பெற்றன. இந்த பேரணி பொதுக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அலைகடல் என திரண்டு வந்து பங்குகொண்டனர். பேரணி அணிவகுத்து வந்தபோது சாலையின் இருபுறங்கலிலும், வாகனங்களி லும், பேருந்துகளிலும் பயணம் செய்வோரும் தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்து கொண்டும் செல்பி எடுத்துக் கொண்டும் சென்றனர்.