tamilnadu

img

அரசு மருத்துவ அலுவலர்களுக்கான கருத்தரங்கம் துவக்கம்

அரசு மருத்துவ அலுவலர்களுக்கான கருத்தரங்கம் துவக்கம்

சேலம், மே 15- ஏற்காட்டில், அரசு மருத்துவ அலுவலர்க ளுக்கான 2 நாள் கருத்தரங்கத்தை அமைச் சர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகி யோர் வியாழனன்று துவக்கி வைத்தனர். அரசு மருத்துவ அலுவலர்களுக்கான தலைமைத்திறன் மேம்பாடு மற்றும் செயல் திறன் வளர்ச்சிக்கான இரண்டு நாள் கருத்த ரங்கம், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வியாழ னன்று துவங்கியது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச் சர் ரா.ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத் தனர். அப்போது, சேலம் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் முதற்கட்ட செயற்கை கருத்தரிப்பு மையம், மனநல அவ சர சிகிச்சை, மீள் மையம் மற்றும் ஹீமோ பிலியா செயலி ஆகியவற்றையும் துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைப்ப தற்கான பணிகள் நடைபெற்று கொண்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் தினந்தோறும் 10  லட்சம் பேர் வரை துணை சுகாதார நிலையங் கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டம்  மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என்று மருத்துவ சேவைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தனியார் மருத்துவ சேவைகளில் இருந்து விடுபட்டு, அரசு மருத் துவ சேவைகள் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். புற்றுநோயை கண்டறியும் அதிநவீன மருத் துவ கருவிகளான பெட் சிடி ஸ்கேன் (PET CT Scan) சென்னை, மதுரையில் மட்டுமே  இருந்தது. தற்போது சேலம், கோவை, தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் புதியதாக அமைக்கப்பட் டுள்ளன. மேலும், 4 இடங்களில் அமைக் கப்படவுள்ளது. தருமபுரியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது, என்றார். இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்  குமார், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்  தம்புராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), தே.மலை யரசன் (கள்ளக்குறிச்சி), மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சியகம் இயக்குநர் ஜே.சங்கு மணி, மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக் குநர் ஜெ.ராஜமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.