tamilnadu

img

சிறைவாசிகள் சுய தொழில் துவங்க உதவித் தொகை: முதல்வர் வழங்கினார்

சென்னை, மே 5- சிறையிலிருந்து முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்கிட 3 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணா மலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொது  மன்னிப்பில் சிறையிலிருந்து முன்விடு தலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறை வாசிகளுக்கு தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சுய தொழில் தொடங்கிட 3 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன் னாள் சிறைவாசிகளுக்கு காசோலை களை வழங்கினார். இந்திய சிறைக்குழுவின் பரிந் துரைக்கிணங்க, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம், அலுவல் சாரா  நிறுவனமாக, 1921 ஆம் ஆண்டு தொடங் கப்பட்டது. சிறையிலிருந்து விடு தலை பெற்று வருபவர்களின் நல்வாழ் விற்காக,

அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுத்து, அவர் கள் சமூகத்தில் நேர்மையாக வாழ்வ தற்கு வழிவகை செய்யும் வகையில், சுயதொழில் தொடங்க தேவையான நிதி உதவிகளை வழங்குவதே இச்சங் கத்தின் குறிக்கோளாகும். சிறை  மீண்டோர் நலச்சங்கம் இந்தியா விலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு, அவர் கள் கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத்  தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட 3 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடை யாளமாக 10 முன்னாள் சிறைவாசி களுக்கு முதலமைச்சர் காசோலையை  வழங்கினார். இதன்மூலம், விடுதலை செய்யப் பட்ட 660 சிறைவாசிகள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தி,  மறுவாழ்வு பெற்று மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடாமல் சமூகத்தில் புதிய  வாழ்க்கையைத் தொடங்க வழிவகுக் கும்.