ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணி நியமன உத்தரவுகளை வியாழனன்று (அக்.13) முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் ஆர். பிரியா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா,பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குநர் க. அறிவொளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.