மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்க ளன்று (நவ.14) சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளுக்குச்செல்கிறார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்தது. நவ.11ம் தேதி காலை 8.30 மணி முதல் நவ.12ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில், 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சீர்காழி அருகேயுள்ள உப்பனாற்றின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சூரக்காடு, தென்பாதி, சட்டநாதபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் மழைநீரால் சூழப்பட்டன. மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகு மற்றும் 6 ஃபைபர் படகுகள், திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகு ஆகியவை கடலில் மூழ்கின.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சீர்காழியில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். ஞாயிறன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை (நவ.14) மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர் மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
மயிலாடுதுறை/சீர்காழி,நவ.13- வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில் மயிலாடு துறை மாவட்டத்தில் அதீத கன மழை பெய்து 75 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. 122 ஆண்டு கால வரலாற்றில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பெய்து சீர்காழி, கொள்ளிடம் பகுதியே தனி தீவு போன்று காட்சி யளிக்கிறது. குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. சில பகுதிகளில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம் களுக்குகூட செல்ல முடியாமல் நீர் சூழ்ந்துவிட்டதால் வாழ்வாதாரத்தை தொலைத்து மக்கள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப் பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதிப்பு விபரம்
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை-வெள்ளப் பாதிப்புகளை விரி வாக விளக்கியுள்ளார். “சீர்காழி வட்டத்தில் கொண்டத்தூர், சேமங்க லம், சட்டநாதபுரம், திருநகரி, காரை மேடு, புதுத்துறை, பெருந்தோட்டம், ஆலவெளி, தில்லைவிடங்கன், திருவெண்காடு, விளந்திடசமுத்திரம், திருவாலி, எடக்குடி, வடபாதி; கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆச்சாள் புரம், புளியந்துறை, குதிரைகுத்தி, ஆளாளசுந்தரம், பச்சைபெருமா நல்லூர், வேட்டங்குடி, மாதானம், அளக்குடி, நாதல்படுகை; மயிலாடுதுறை ஒன்றியத்தில் மாப்படுகை, அருண்மொழிதேவன், கீழமருதாந்தநல்லூர், ஆனதாண்டபுரம், சேத்தூர், பொன்வாசநல்லூர், பாண்டூர், பொண்ணூர்; குத்தாலம் ஒன்றியத்தில் சேத்தூர், பெரம்பூர், பாலூர்; செம்பனார்கோவில் ஒன்றியத்தில் கீழையூர், தலைச்சங்காடு, கருவி, காலமநல்லூர், பூந்தாழை, மாமாக்குடி, அப்பராசபுத்தூர், மேலையூர், மேலப் பாதி, கீழப்பாதி, கஞ்சாநகரம்;
தரங்கம்பாடி ஒன்றியத்தில் திருக்கடையூர், டி.மணல்மேடு, சீதைசிந்தாமணி, நெடுவாசல், திருவிடைக்கழி, தில்லையாடி, விசலூர் உள் ளிட்ட ஒட்டுமொத்த கிராமப் பகுதிகளும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பெரும்பாலான பொதுமக்கள் முகாம்களில் தஞ்சமடைந்திருந்தா லும், குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை நீடித்து வருகிறது. கால்நடைகள் காணாமல் போய்விட்டதாகவும், நீரில் அடித்து செல்லப்பட்டிருப்பதாகவும், இறந்துவிட்டதாகவும் வேதனையான குடில்கள் மக்களிடமிருந்து வருகின்றன.
பல கிராமங்களில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மாவட்டத் தில் நான்கு வழிச்சாலை, புறவழிச்சாலை என இரு பணிகள் நடைபெறுவதால் சாலைக்காக ஏராள மான வடிகால், வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், வெள்ளநீர் வடிய வாய்ப்பில்லாமல் போனதும் வெள்ளப் பாதிப்புக்கு ஒரு காரண மாக உள்ளது. மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் சங்கத்தின் நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டதில், சாகுபடி செய்யப்பட்ட பெரும் பாலான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி வருகின்றன. வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து விவசாயிகளும், பொதுமக்களும் நிர்க்கதியாய் உள்ளனர். எனவே ஒன்றிய அரசு மயிலாடுதுறை மாவட் டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து, உரிய நிவாரணத்தை அளிக்க வேண் டும். தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளை துரி தப்படுத்துவதோடு, மின் கம்பங்கள் சீரமைப்பு பணி களுக்கு கூடுதலான ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி
கொள்ளிடம் பகுதியில் சுமார் 150 கிரா மங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டிருந்த சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவ சாயிகளுக்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்பட்டுள் ளது. கொள்ளிடம் பாரத்சேகர் நகர், எவரெஸ்ட் நகர், மணிநகர், தைக்கால், நல்லோர், ஆளாள சுந்தரம், பறவைங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் மழையி னால் சேதமடைந்தன. அழகியநத்தம் மற்றும் கொள்ளிடம் அருகே நல்லூர் உள்ளிட்ட குடி யிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. நல் லூர் தேசிய நெடுஞ்சாலையில் உரிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வெளியேற முடி யாமல் நெடுஞ்சாலையிலேயே தேங்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் தண் ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக் குள்ளாகி உள்ளனர். கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்திலிருந்து ஆளாளசுந்தரம் வழியாக மாதானம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதி யில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விளைநிலங்க ளுக்கு இந்த தரைப்பாலம் வழியே தண்ணீர் சென்று வடிய வேண்டிய கட்டாய நிலை உள்ளது. சாலை யின் குறுக்கே தண்ணீர் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதால் இந்த வழியே செல்பவர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
வெள்ளியன்று இரவு வீசிய காற்றின் வேகத் தால் கொள்ளிடம் பயணியர் விடுதியின் வளா கத்தில் உள்ள ஒரு வாகை மரம் முறிந்து விழுந்ததில் பயணியர் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்தது. கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் புது மண்ணி ஆற்றில் சனிக்கிழமை தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியதால், அதன் கரை உடைந்து ஆயிரக்க ணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை அடைக்கும் முயற்சியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
புராண நம்பிக்கையைத் தகர்த்த இயற்கை
சீர்காழியில் இதுவரை தண்ணீர் தேங்காத குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது. இதுதவிர வைத்தீஸ்வரன்கோவில் உள்பட 30-க்கும் மேற் பட்ட பகுதிகளில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலுக்குள் வெள்ளநீரே புகாது என்ற ஐதீக நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்போது அந்த நம்பிக்கை தகர்ந்து, சட்டநாதர் கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்து ஆறு போல் ஓடுகிறது. இந்த உலகத்தை சுற்றி வளைந்து இருக்கும் பெருங்கடல், பேரிடர் காலத்தில் பொங்கி எழுந்து உலகை அழித்தபோது, உமாமகேசுவரர் (சிவன்) பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு (சீர்காழிக்கு) வந்து தங்கி, திரும்பவும் அண்டத்தை உருவாக்கி யிருக்கிறார் என்பது ஐதீகம். உலகமே தண்ணீ ரில் மூழ்கிய போது இங்கு மட்டும் தண்ணீர் வர வில்லை என புராண வரலாறு கூறுகிறது. இதனால் சீர்காழிக்கு திருத்தோணிபுரம் என்ற பெயரும் உண்டு.
மேலும், சீர்காழி நகர்பகுதிக்கு பெரும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது இல்லை என்றும் நம்பி வருகின்றனர். இத்தகைய புராண நம்பிக்கை யை இயற்கை தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை கொட்டித் தீர்த்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் விதமாக சீர்காழி பகுதியில் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் இது வரை 32 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16,577 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.