சின்னாளப்பட்டி, பிப்.1- திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அம்பாத்துரை இந்திரா புரம் பகுதியில் அருந்ததிய சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கென்று இந்தி ராபுரத்தில் ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி இருந்தது. தற்போது அப்பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் வெட்ட வெளி யில் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறுகை யில், எங்கள் பிள்ளைகளுக்கென்று இந்தப் பகுதியில் கடந்த சில மாதம் வரை அரசு ஆதி திராவிட துவக்கப்பள்ளி இருந்தது. தற் போது அப்பள்ளி சீரமைப்பு காரணமாக இடிக்கப்பட்டதால். எங்கள் குழந்தைகள் மரத்தடியில் கல்வி கற்கும் நிலை உள்ளது. சாப்பிடும் போது கூட பறவைகள் எச்சம் சோற்றில் விழுந்து விடும் என்று அஞ்சி சாப்பிடுகிறார்கள். இது குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் கூறியும் எந்தப் பல னும் இல்லை. மாவட்ட நிர்வாகம் அக்கறைக் காட்ட வேண்டும். அருகில் திறந்தநிலை யில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது பள்ளி அருகில் வீடு ஒன்றில் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு அதி காரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.டி. கலைச்செல்வன் கூறுகையில், பல இடங்க ளில் தலீத் மற்றும் அருந்ததியர்களின் குழந் தைகளை ஒதுக்கும் நிலையே உள்ளது. தமிழக அரசு மாணவ மாணவிகள் நலனில் அக்கறை காட்டுவது பாராட்டுக்குரிய செயலாகும். ஆனால் இது போன்ற தலித் அருந்ததியர் குழந்தைகள் மீது அதிகம் அக்கறை காட்ட வேண்டும் மாவட்ட நிர்வாக மும் உடனே தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.