தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்சார்பில், “பட்டியலின மக்கள் மற்றும்பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான சட்ட வரைவு ஆலோசனை கூட்டம்” கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞானம் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் துவக்கி வைத்தார். சட்டத்தின் நோக்கம் குறித்து மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நிறைவுரையாற்றினார். தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.