tamilnadu

img

சத்தியவாணிமுத்து நூற்றாண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்

அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை,பிப்.10- விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-  திராவிட இயக்க முன் னோடிகளில் ஒருவரான அன்னை சத்தியவாணி முத்து பிறந்தநாள் நூற் றாண்டு 2023 பிப்ரவரி 15-ஆம் நாள் ஆகும். அந்நாளை அரசு விழாவாகக் கடை பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை  கேட்டுக் கொள்கிறோம்.  அன்னை சத்தியவாணி முத்து சுயமரியாதை இயக் கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். அதன்பின்னர் 1949-இல் திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே அண்ணாவோடு அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1957, 1967,1971  தேர்தல்களில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர். தமிழ் நாட்டில் முதன்முதலில் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி அவர்தான்.  1967-இல் அண்ணா அமைச்சரவையிலும் அதன்பின்னர் கலைஞரின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பொறுப் பேற்ற முதல் பெண்மணி யும் அவர்தான். 1979 ஆம்  ஆண்டு சரண்சிங் பிரதமராக  இருந்தபோது ஒன்றிய அமைச்சராகப் பொறுப் பேற்ற தமிழ்நாட்டை சார்ந்த முதல் பெண்மணியும் அவரே. ஆதிதிராவிட மக்களு டைய கல்வி மேம்பாட்டுக்கா கவும், பெண்களின் முன் னேற்றத்துக்காகவும் பாடு பட்டவர். அன்னை என்ற  பத்திரிகையின் ஆசிரிய ராகப் பணியாற்றியவர். இத்தகைய பல்வேறு பெருமைகளைக்கொண்ட அன்னை சத்தியவாணி முத்துவின் பங்களிப்பைத் தமிழ்நாடு அரசு உரிய வகை யில் அங்கீகரித்து அவரது  நூற்றாண்டை அரசு விழா வாகக் கொண்டாட வேண்டு மென கேட்டுக்கொள்கி றோம். தமிழ்நாட்டில் மகளிர் கல்லூரி ஒன்றுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.