மதுரை, ஜூலை 18- சாத்தான்குளம் தந்தை மகன் சித்ர வதை கொலை வழக்கில் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையிலடைக்கப் பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட பத்து காவல்துறையினரிடமும் மனித உரிமைகள் ஆணைய காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) குமார் மதுரை மத்திய சிறையில் சனிக்கிழ மையன்று விசாரணை நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர், சிறைத்துறை, மாநில மனித உரிமை ஆணை யத்தின் புலனாய்வுப் பிரிவு ஆகியோர் அறிக்கை அளிக்க ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து , மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளர் குமார் கடந்த நான்கு நாட்களாக சாத்தான்குளம் மற்றும் திருநெல்வேலியில் விசாரணை நடத்தினார்.
சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜின் மனைவி, மகள்கள், உறவினர்கள், கோவில்பட்டி சிறையிலிருந்து பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகி யோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற மூன்று சிறைக் காவலர்கள், கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் சங்கர், மருத்து வர்கள் வெண்ணிலா, வெங்கடேஷ், சாத்தான் குளம் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் மற்றும் இருவரின் உடலை உடற்கூறாய்வு செய்த பாளையங்கோட்டை அரசு மருத்துவர்கள் மூன்று பேர் என மொத்தம் 20 பேரிடம் விசா ரணை நடத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையிலடைக்கப் பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட பத்து காவலர்களிடம் சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை சுமார் 2 மணி நேரமாக தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
இரண்டு தினங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும். விசாரணை யின்போது காவல்துறையினர் பத்து பேரும் முழுமையாக ஒத்துழைத்தனர். மருத்து வர்களிடம் நடத்திய விசாரணையும் காவ லர்களிடம் நடத்திய விசாரணையும் ஒத்துப் போனது என்றார்.