tamilnadu

img

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு... காவலர்களின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

மதுரை:
சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை-மகன் காவல்துறையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய  காவலர்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ்,முத்துராஜா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன்வழங்கக் கோரி இரண்டாவது  முறையாக சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கு முந்தைய விசாரணையின் போது காவலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பவம் நடந்த அன்று காவல் நிலையத்தில் இரவு முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று சொல்லக்கூடிய ஐந்து நபர்கள் இருந்துள்ளனர். இதில் காவலர் முருகன் தனது வாக்குமூலத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஐந்து நபர்கள் தான் தந்தை-மகனை தாக்கியதாகக் கூறியுள்ளார் எனத் தகவல் உள்ளது என்றார். இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் சம்மந்தப்பட்டவர்களை இதுவரை விசாரிக்கவில்லை குற்றப்பத்திரிகையில் அவர்கள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை எனவே இதில் உள்நோக்கம் உள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்களையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டுமென வாதிட்டார்.

இந்த வழக்கின் முக்கியம் எனக் கருதக்கூடிய பெண் காவலர்கள் இருவருடைய சிபிஐ தரப்பு  சாட்சியங்கள் நீதிமன்றத்திற்குத் தேவை. எனவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யில் தாக்கல் செய்யவேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில் காவலர்களின் ஜாமீன் மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  சிபிஐ தரப்பில் ஒன்பது நபர்கள் மீது மதுரை நடுவர் நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்  இரண்டாவது முறையாக மூன்று காவலர்களின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.