tamilnadu

img

முன்னுதாரணம்!

கடலூர் மாவட்டத்தில் இடதுசாரி இயக்கத் தோழர் ர்களால் சசி என்று அன்போடு அழைக்கப்படுகிற 81வயது நிரம்பிய தோழர் சிவராமன், இடதுசாரி இயக்கத்தின்பால் உள்ள பற்றின் காரணமாக திட்டமிட்ட முறையிலும் துல்லியமான முறையிலும் இயக்க வளர்ச்சிக்கு நிதி அளிப்பதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அவரது செயல், ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றால் மிகையல்ல. மார்க்சிய இயக்கத்தின் மூத்த தோழரான சிவ ராமன், சமீபத்தில் கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சி நிதியாக ரூ.60  ஆயிரத்தை என்னிடம் வழங்கினார். தோழர் சிவராமன், அவரது துணைவியார் சவுந்திரம் (வயது 76) - இவர்களது 60ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி ரூ.60 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. 

தோழர் சிவராமன் இப்போது மட்டுமல்ல, தான் பெறுகிற ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை இயக்க அமைப்புகளுக்கு தொடர்ந்து வளர்ச்சி நிதியாக அளித்து வருகிறார். 2012ல் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார். 2012 முதல் 2016 வரை ஐந்தாண்டு காலம் அஞ்சலகத்தில் வைப்புக் கணக்கு தொடங்கி மாதம் 1000 ரூபாய் வீதம் தவறாமல் செலுத்தி, முதிர்வுத்தொகை யாக கிடைத்த ரூ.75 ஆயிரத்தை இயக்க வளர்ச்சி நிதியாக வழங்கினார்.  அதேபோல பணி ஓய்வுக்குப் பிறகும் தமது 70வது வயதில் ரூ.70 ஆயிரத்தை வளர்ச்சி நிதியாக வழங்கினார்.  கடலூரில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33வது மாநில மாநாடு நடைபெற்ற போது தனது பங்காக ரூ.33 ஆயிரம் வழங்கினார்.  தான் நேசிக்கும் மார்க்சிய இயக்கத்திற்கு ஏதேனும் ஒரு வகையில், தனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்தி நிதி உதவி அளிக்க வேண்டும் என்பதே இவரது செயல்பாட்டின் அடிப்படை நோக்கம்.  இத்தகைய எண்ணற்ற தோழர்கள், ஆதரவாளர் கள்தான் எமது இயக்கத்தின் அடித்தளம். ஆதார சுருதி. 

- ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
 

 

 

;