திருச்சிராப்பள்ளி,மே 30- தொழிலாளர் உரிமை காத்திட தமிழகம் முழுவதும் ஏழு முனைகளிலிருந்து கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மாண்டமான சிஐடியு நடைபயண அணிவகுப்பு, செவ்வாயன்று மாலை திருச்சியில் சங்கமித்தது. மக்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசின் நவீன தாராளமயக் கொள்கையை எதிர்த்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர் உரிமை பறிக்கும் புதிய நான்கு சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும், மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், 480 நாட்கள் பணிபுரிந்த தொழி லாளர்களை உடனடியாக பணி வரன்முறைப்படுத்த வேண்டும்,
நிரந்தரத்தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்த முறையை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட உழைக்கும் மக்களின் 14 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலி யுறுத்தியும் சிஐடியு சார்பில் தமிழகத்தின் 7 முனைகளிலிருந்து மே 20 அன்று துவங்கிய நடைப் பயண பிரச்சாரம் 35 மாவட்டங்கள் வழியாக 2100 கிலோமீட்டர் தூரம் 10 நாட்கள் பயணம் செய்து செவ்வாய் அன்றுமே 30 திருச்சியில் சங்கமித்தன. திருவொற்றியூர், கோயம்புத்தூர், கடலூர், மீஞ்சூர், களியக்காவிளை, தென்காசி, ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து முறையே சிஐடியு தலைவர்கள் எம்.தனலட்சுமி, கே.சி.கோபிக் குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன், வீ.குமார், எஸ்.ராஜேந்திரன் மற்றும் கே.ஆறு முகநயினார் ஆகியோர் தலைமையில்; பால கிருஷ்ணன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சி.ஜெய பால், கே.விஜயன், ஜி.சுகுமாறன், பி.என்.தேவா மற்றும் எஸ்.கே.தியாகராஜன் ஆகி யோரது ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழிலாளர் கோரிக்கைகளை பிரச்சாரம் செய்து வந்த 7 குழுக்களும் திருச்சி உழவர் சந்தையில் சங்கமித்தன. அங்கிருந்து துவக்கிய பேரணி பட்டாபிராமன் தெரு, தென்னூர் ஹைரோடு வழியாக புத்தூர் நால்ரோட்டில் அமைக்கப் பட்டுள்ள பொதுக்கூட்ட மேடை அருகே நிறை வடைந்தது.
பேரணியின் முகப்பில் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில பொருளாளர் மாலதிசிட்டிபாபு, துணைத் தலைவர் எம். சந்திரன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன் உள்ளிட்டோர் அணிவகுத்து வந்தனர். பேரணியின் நிறைவாக புத்தூர் நால் ரோட்டில் நடைபெற்ற நடைபயண பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு பொதுச்செய லாளர் எஸ்.தபன்சென் உள்ளிட்ட தலை வர்கள் சிறப்புரையாற்றினர். முடிவில் சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர் செயலாளர் செல்வி நன்றி கூறினார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் மாற்று ஊடக மையம், து.ஜானகிராமன் கலைக்குழு, திருப்பூர் கலைக்குழு மற்றும் ஏழு பய ணக்குழுக்களிலும் பங்கேற்ற கலைக்குழுக் களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் எழுதிய “ஒன் றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை ஏன் எதிர்க்கிறோம்” என்ற நூலை ஏ.கே.பத்மநாபன் வெளியிட அ. சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார்.