tamilnadu

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகாரிகள் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
தேவகோட்டை அருகே உள்ள கல்லங்குடி கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில் தனிநபருக்கு கிராவல் மண் அள்ளுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனகோரிய மனு மீதான விசாரணையில், மணல் கடத்தலை தடுக்கஅதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டு வழக்கைமுடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா அருகேயுள்ள கல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தராஜாங்கம், ராமசாமி, விசுவநாதன், கனகராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தமனு:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரன் கல்லங்குடி கிராமத்தில் கல்லங்குடி கண்மாய் 250 ஏக்கர் நிலத்தில் உள்ளது . இதன் மூலம்300-க்கும் மேற்பட்ட. விவசாயிகளின் நிலங்கள் பயன் பெறுகின்றன. அப்பகுதியில் உள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.விருசுளி ஆற்றிலிருந்து கல் லங்குடி ண்மாய்க்கு மூன்று நீர்வரத்து கால்வாய்கள் மூலமாக நீர்வருகிறது. இந்த நிலையில் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும் தொட்டச்சி அம்மன் கோவில் கால்வாய்,தொடுப்பூரணி கால்வாய் ஆகிய நீர்வரத்து கால்வாய்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர்.கனரக இயந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளி 50-க்கும்மேற்பட்ட கனரக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். கிராமத்தில் உள்ள தனியார் பட்டாநிலத்தில் உவர் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று, அதை தவறாகப் பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.கனிமவள சட்டபடி தனிநபர் கள் மணல் குவாரி நடத்தக் கூடாது என்று உள்ளது. அவ்வாறு இருக்கும் போது மண் அள்ள அனுமதி பெற்று மணல் கொள் ளையில் ஈடுபடுகின்றனர். உயர்நீதிமன்றம் மதுரை கிளை தனியார் நிலங்களில் மண் அள்ளவும் அனுமதி வழங்கக் கூடாது என தடை விதித்துள்ளது. மண் அள்ளஉரிமம் பெற்று மணல் கடத்தலில்ஈடுபடுவதால், நீராதாரம், வாழ் வாதாரம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே கல்லங்குடி கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில் தனிநபருக்கு கிராவல் மண் அள்ளுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அங்கு வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது விதி மீறல் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது என்றார்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

;