மோடி அரசு தமிழ் நாடு ஆளுநரு க்கு இரண்டு வேலைகள் கொடுத்திருப்பதாகத் தெரி கிறது. ஒன்று, திமுக அரசை இயங்க விடாமல் முடிந்த அளவு முட்டுக் கட்டைகள் போடுவது. இரண்டு, திமுக வின் திராவிட இயக்க கோட்பாடுக ளுக்கு எதிராக கருத்தியல் பிரச்சாரம் செய்வது. முதல் விஷயத்தைப் பொறுத்த வரை தமிழ்நாடு சட்டமன்றம் நிறை வேற்றிய 20க்கு மேற்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார். இதன் மூலம் இந்த அரசு புதிதாக எந்தக் காத்திரமான செயலையும் செய்யவிடாமல் பார்த்துக் கொள்கிறார். இதனால் ஆளுநருக்கு ஏற்பட்டிருப்பது என்னவோ கெட்டபெயர்தான். திமுக எதிர்ப்பாளர்கள்கூட இந்த விஷ யத்தில் இவரை ஆதரிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, ஆன்லைன் ரம்மி தடை அவசரச்சட்டத்தை காலாவதி யாக்கியதன் மூலம் அதை கன ஜோராக நடத்த அனுமதித்திருக்கி றார். இதனால் உயிர்ப்பலிகள் தொ டர்கின்றன. சூதாட்டத்தை ஆதரித்த ஆளுநர் எனும் அவப் பெயரோடு, “ரம்மி ரவி” எனும் பட்டப் பெயரையும் பெற்றிருக்கிறார் மனிதர்! ஆனாலும் கர்மயோகியாக தனக்கிடப்பட்ட இரண்டாவது வேலை யையும் தீவிரமாகச் செய்து வருகிறார். திராவிட இயக்கம் பேசும் ஒரு முக்கிய மான கோட்பாடு சமூகநீதி.சொல்லப் போனால், கம்யூனிஸ்ட் இயக்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள் எல்லாம் முன்னெடுக்கும் கோட்பாடு அது. அதற்கு நேர் எதிரான சனாதன தர்மம் பற்றி மனிதர் வாய்ப்பந்தல் போடுகிறார்.
வரலாற்றுப் பொய்
திருவையாறில் நடந்த தியாகையர் விழாவில்கூட அதையே பேசியிருக்கி றார். இவர் பேசும் சனாதன தர்மம் எது, அதில் வருணாசிரம தர்மம் வருமா வராதா என்று நாம் கேள்வி எழுப்பினோம். அதற்கு இப்படியொரு பதிலைத் தந்திருக்கிறார்: “சனாதன தர்மம் எழுப்பிய சனாதன கலாச்சாரம் யாரையும் விலக்குவதில்லை, மாறாக அனைவரையும் சேர்த்துக் கொள்கிறது”. இது மாபெரும் வரலாற்றுப் பொய் என்பது மட்டுமல்ல, இப்பொழுதும் பொய்யே. இவர் கூறும் சனாதன தர்மம்தான் தீண்டாமையைத் தீவிர மாகக் கடைப்பிடித்தது, இப்போதும் கடைப்பிடிக்கிறது. அன்று பட்டியல் சாதியினரையும் நாடார் குல மக்க ளையும் ஆகமக் கோயில்களுக்குள் விடவில்லை.
இன்றும் உரிய பயிற்சி பெற்ற பிராம ணரல்லாத சாதியினரை அர்ச்சகராக கருவறைக்குள் விடவில்லை! இந்த சனாதன தர்மத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டில் எழுந்தது சமூக தர்மம். 1939இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதன்முதலாக பட்டியல் சாதியினரையும் நாடார்களையும் அழைத்துச் சென்றது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் இயக்கம். அதில்தான் அன்று கம்யூனிஸ்டுகளும் இருந் தார்கள். அந்த ஆலய நுழைவுப் போ ராட்டத்தை கடுமையாக எதிர்த்த வர்கள், அர்ச்சகர்களைத் தூண்டி விட்டு கோயிலை அடைத்தவர்கள் சாட்சாத் சனாதன தர்மிகள்!
தியாகையர் விழாவில் சனாதனம்
இவர் எந்த தியாகையர் விழாவில் பேசினாரோ அங்கே, அந்தக் காலத்தில் தமிழ்ப்பாட்டு பாடினார் தண்டபாணி தேசிகர். அதனால் அந்த பூமி தீட்டுப்பட்டுவிட்டது என்று ஒப்பாரி வைத்தார்கள் சனாதன தர்மிகள்! தமிழிசைப் புறக்கணிப்பு பின்னரும் தொடர்ந்தது. பாரதி அதைக் கண்டித்து எழுதினான். இப்போ தும் சனாதனிகள் நடத்தும் இசைக் கச் சேரிகளில் தமிழ் புறக்கணிக்கப்படும் கொடுமை நடக்கவே செய்கிறது. இதைக் காட்சிப்படுத்தினார் கே.பாலச் சந்தர் தனது “சிந்துபைரவி” படத்தில்! இவற்றுக்குப் பெயர்தான் அனை வரையும் அரவணைக்கிற சனாதன கலாச்சாரமா, சனாதன தர்மமா? இல்லை. இது வெல்லாம் வருணா சிரம அதர்மம். அதனால்தான் இப்போ தும் சனாதன தர்மத்தில் மனுதர்மம் வராது என்று அவர் சொல்லவில்லை. மாறாக பொத்தாம் பொதுவாகப் பேசி, பூசி மெழுகுகிறார்.
வேதம், கீதை, மனுதர்மம் அங்கே தோன்றியது
இந்த லட்சணத்தில் இந்த சனாதன தர்மம் “தெற்கிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து துவங்கியது; நாடு முழுக்க பரவியது; ஒரு குடும்பமாக ஒன்றுபடுத்தியது. அதுவே பாரதம்” என்றும் ஒரு போடு போட்டிருக்கிறார்! சனாதனம் என்றால் ஆதிஅந்தம் இல் லாதது என்று ஒருபுறம் சொல்கிறார் கள், மறுபுறம் அது தமிழ்நாட்டிலி ருந்துதான் புறப்பட்டது என்றும் அடித்து விடுகிறார்கள்! இதில் எது உண்மை? இரண்டும் உண்மை அல்ல. மனிதன் உருவாக்கிய சகலத்திற்கும் துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு. சனாதன தர்மம் மட்டும் எப்படி அதில் தப்பும்? தமிழ்நாட்டில் தோன்றியது என்கிறாரே, அந்த தர்மம் இருப்பது வேதங்களில், பகவத் கீதையில், மனு தர்ம சாஸ்திரத்தில். இவையெல்லாம் இங்கே தோன்றவில்லையே, எங்கேயோ வடக்கே தோன்றியவை. இவை இருக்கும் சமஸ்கிருதமும் அங்கே தோன்றியதுதான். சனாதன தர்மத்தின் மூல நூல்க ளும், அவற்றின் மொழியும் வேறு எங்கோ தோன்றியிருக்க, அது மட்டும் இங்கே எப்படி ஐயா தோன்றியி ருக்கும்? தாய் இல்லாமல் குழந் தையா? பசு இல்லாமல் கன்றா? அபத்தத்திற்கும் ஓர் அளவு வேண் டாமா!
சரித்திரம் அறியாதவர்
“இந்த நாடு ஒரு ராஜாவாலோ அல்லது ஒரு பலவானாலோ கட்டப் பட்டது அல்ல; மாறாக முனிவர்க ளால், ரிஷிகளால், புலவர்களால் கட்டப்பட்டது” என்றும் ஆளுநர் புகன்றிருக்கிறார். பாவம் சரித்திரம் அறியாதவர். இங்கே இருந்தது அங்க, வங்க, கலிங்க ஐம்பத்தாறு நாடுகள். சுல்தான்களும் முகலாயர்களும் கூட முழு இந்தியாவை ஆண்டது இல்லை. இந்தியா என்கிற முழு நாட்டைக் கட்டமைத்து ஆண்டது ஆங்கி லேயர்கள்தான். இவர் சொல்லுகிற முனிவர்கள், ரிஷிகள் புராணங்களில் வாழ்ந்த வர்கள். சில ஞானிகளின், சில புலவர்க ளின் சிந்தனைகள், படைப்புகள் துணைக்கண்டத்தில் பரவியிருந்தது உண்மை. அவையும் பன்முகப் பட்டவை. அந்தப் பன்முகத் தன்மையை மறுப்பதுதான் இவரது யஜமான் ஆர்எஸ்எஸ் முன்மொழியும் இந்துத்துவா. சிந்தனைகள் இலக்கி யங்களால் இந்த நாடு உருவாக வில்லை. ஐரோப்பிய முதலாளித்து வத்தில் எழுந்த ஏகாதிபத்திய ஆதிக்கத்தால் இது கட்டமைக்கப் பட்டது. எனினும் அதை எதிர்த்து நடந்த மகத்தான சுதந்திரப் போரில் இந்திய மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமை எழுந்தது; இந்த நாடு ஒரு குடியரசாக நிலைநிறுத்தப்பட்டது.
சுதந்திரப்போரில் பங்குபெறாதது ஆர்எஸ்எஸ். அதன் பணியாளராகிய இந்த ஆளுநருக்கு இந்த வரலாறு தெரிய நியாயம் இல்லை. ஆனால் தெரி யாத விஷயத்தைப் பேசி தான் வகிக்கும் பதவிக்கு இழிவுதேடக் கூடாது என்பது தெரிந்திருக்க வேண்டும்! இறுதியாக ஒன்று. “அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் போல இங்கே தியாகராஜ சுவாமிகளுக்கும் ஒரு கோயில் கட்ட வேண்டும்” என்றி ருக்கிறார் ஆளுநர். அங்கே பாபர் மசூதியை இடித்து கோயில் கட்டியி ருக்கிறார்கள். இங்கே எதை இடிக்கப் போகிறார்களோ? இவர்களின் சனாதன தர்மத்தில் கடப்பாரைக்கே வேலை அதிகம்!