சாம்சங், எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் சட்டவிரோத உற்பத்தி
சென்னை, பிப். 13 - சட்டவிரோத உற்பத்தியில் ஈடு பட்டுள்ள சாம்சங், எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் இளங்கோவனிடம் வியா ழனன்று (பிப்.13) சிஐடியு மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார் புகார் மனு அளித்தார். அதில், “சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்துகின்றனர். இது தொழிற்சாலைச் சட்டத்திற்கு விரோதமானது. இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.எச். எலக்ட்ரா னிக்ஸ் ஆலையில் நிரந்தரத் தொழி லாளர்கள் 93 பேரையும் வெளி யேற்றி விட்டு, கடந்த 9 மாத கால மாக ஒப்பந்த - தற்காலிக தொழி லாளர்களை வைத்து உற்பத்தி செய்கின்றனர். எனவே, சட்ட விரோத உற்பத்தியை தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட இணை இயக்குநர், உயர் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு இ. முத்துக்குமார் பேட்டியளித்தார்.
தொழிற்சாலையில் 1200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை நிர்வாகம் புகுத்தி இருப்பது சட்டவிரோதமானது. இதுபற்றி தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநரிடம் பிப்ரவரி 5 அன்று புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை. நிரந்தர மற்றவர்களை கொண்டு உற்பத்தி யில் ஈடுபடுமாறு நிரந்தரத் தொழி லாளர்களை நிர்பந்திப்பதால் உள்ளி ருப்பு போராட்டம் 9-ஆவது நாளாக நடக்கிறது. 3 பேரை தற்காலிக நீக்கம் செய்துள்ள நிர்வாகம், மேலும் பலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்ப தாக மிரட்டுகிறது” என்று தெரிவித்தார். இதேபோல எஸ்.எச். நிறு வனத்திலும் சட்டவிரோத உற்பத்தி நடப்பதாக கூறிய இ. முத்துக் குமார், “தொழிற்சங்க உரிமையைக் கேட்டால், பன்னாட்டு நிறுவனங்கள் சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபடு கின்றன. 12-16 மணி நேரம் வரை வேலை வாங்குகின்றனர். விபத்துக்களை பதிவு செய்ய வில்லை. கொடூரமான உழைப்புச் சுரண்டல் நடக்கிறது. அரசும் இதை வேடிக்கை பார்க்கிறது. தொழிற் சாலைகள், வேலைவாய்ப்பு முக்கி யம். அதேசமயம் சட்டப்படி நடக்க வேண்டியது முக்கியமானது” என்றார். “ஹூண்டாய் தொழிற்சாலை யில் 16 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். சங்கத்தில் உள்ள 2400 நிரந்தர தொழிலாளிக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கிறது. எஞ்சிய தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்கப்படுகிறது. நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எனவே, தொழிலாளர்கள் சங்கம் வைக்கிறார்கள்.
சாம்சங் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட 3 புகார்களை அளித்துள்ளோம். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாம்சங் மீது மனித உரிமை மீறல் தொடர்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தொழிற்சாலைத் துறை யின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இது தொடர்ந்தால் தொழில் அமைதி ஏற்படாது. சட்டத்தின்படி தொழிற்சாலை இயங்க வேண்டும்; தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். அரசு தொழில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 14 அன்று காஞ்சிபுரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் போராட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து வேலைநிறுத்தத்தை நோக்கிச் செல்வோம்” என்றும் இ. முத்துக்குமார் குறிப்பிட்டார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி. ஸ்ரீதர், நிர்வாகிகள் ஜெனிட்டன், எஸ். சிவக்குமார், மதனகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.