tamilnadu

img

கொரோனா பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்..... உயர்நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும்

மதுரை:
முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகையில் முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இதற்கு அரசு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளனர். 

கொரோனா நோய் பரவல் தடுப்புஊரடங்கு நாடு முழுவதும் அமலில்உள்ளது. இந்நிலையில்  மருத்துவர் கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசுமற்றும் அரசு சாராத தன்னார்வலர்கள் எனபலர் களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்புபணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடலை முழுமையாக பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகள், முகக்கவசங்கள், கையுறைகள், ரப்பர் காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகையில் முகக் கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இந்தியமருத்துவக் கவுன்சில் பரிந்துரைப்படி பாதுகாப்பு உபகரணம் வழங்கப் பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. 

மேலும் இதற்கு விரிவான பதில் மனுவை மே 27ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

;