tamilnadu

img

ரூ.14 ஆயிரம் கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒரு அதிகாரியை கூட நியமிக்காத ஊழல் அதிமுக

திருப்பூர், பிப். 15 - ரூ.14 ஆயிரம் கோடி செலவில்  தமிழகத்தில் 10 மாநகராட்சி களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை  கண்காணித்து செயல்படுத்து வதற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு அதிகாரியைக் கூட நியமிக்க வில்லை. நேரடியாக அமைச்சர் மூலம் மிகப்பெரும் ஊழலுக்கு அதை பயன்படுத்தினர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரு மான சு.வெங்கடேசன் சாடினார். திருப்பூர் மாநகராட்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட் பாளர்களை ஆதரித்து திங்களன்று மாலை பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவு, வெள்ளியங்காடு நால் ரோடு,  சரளைக்காடு, எம்.எஸ்.நகர் மற்றும்  இந்திரா நகர் ஆகிய ஐந்து பகுதி களில் சு.வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முந்தைய அதிமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்படாததால் இந்த மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் என்பது மாநில அமைச்சர்கள்,  உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு  சிலரிடம் மட்டுமே குவிந்திருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடத்தப்படாத நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஆட்சிக்கு வந்து ஒன்பதே மாதங்களில் திமுக அரசு நடத்துகிறது.

14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்கள் பிரதிநிதிகளாக இன்று அதிகாரம் செலுத்தக்கூடிய நிலை யை திமுக அரசு  ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காகவே மக்கள் இந்த அணிக்கு வாக்களிக்க வேண்டும். ஒன்றிய அரசின் ஏராள மான நிதி நேரடியாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செலவிடப்படு கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் அதிகாரத்தில் இல்லாத நிலையில் அந்த நிதியை அதிமுக ஆட்சியாளர்கள்  முறைகேடாக பயன்படுத்தினர். அதனால்தான் உள்ளாட்சி அதி காரத்தை கையில் வைத்திருந்த அதிமுக அமைச்சர் மிகப்பெரும் ஊழல் செய்தவராக இருந்தார். தமிழகத்தில் 10 மாநகராட்சி களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மொத்தம் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு பெருந்தொகை யைச் செலவிட்டு செயல்படுத்தப் படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் ஒரேயொரு அதிகாரியைக் கூட  அதிமுக ஆட்சியாளர்கள் நியமிக்க வில்லை.  அதிமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தை சீர்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும். உள்ளாட்சி யில் மக்களின் உரிமைக்குரல் ஒலிக்க வேண்டும். 

இப்போது இருக்கும் ஒன்றிய மோடி அரசு எப்படி செயல்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியும். பிரதமர் மோடி தமிழகத்தைப் பற்றி  பேசும்போது ஏதேனும் ஒரு திருக்குறள், சங்க இலக்கியப் பாடல் ஒன்றை வாசிப்பார். ஆனால் தமிழகத்துக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் எதையும் அவர்கள் நிறைவேற்றுவதில்லை. எனவே நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கக் கூடியவர்களாக 38 தமிழக எம்.பி.க்கள் செயல்படுகிறோம். மற்றொரு புறம் அந்த ஆட்சியாளர் களுக்கு ஜால்ரா அடிக்கும் சத்தம் அதிமுகவைச் சேர்ந்தவர் களிடம் இருந்து கேட்டுக் கொண்டிருக் கிறது. எனவே மக்கள் பிரதிநிதிகளாக, மக்களின் உரிமைகளைக் கேட்டுப் பெறக் கூடியவர்களாக இருக்கும் எங்கள் அணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து மக்கள் மன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.  இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார். ஐந்து பகுதிகளிலும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் பங்கேற்றார்.  அனைத்து பகுதிகளிலும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட தோழமை கட்சி களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊழி யர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சு.வெங்கடேசனுக்கு உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.