tamilnadu

img

ஆர்எஸ்எஸ் குண்டர் அடாவடி

திண்டுக்கல்லில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார்  நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுரு கனுக்கு பிணை வழங்கியதை ரத்து செய்ய வலி யுறுத்தி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடைபெற்ற மாதர் சங்க ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் என்ற பெயரில் ஒருவர் குழப்பம் விளைவிக்க முயன்றார். ஆர்ப்பாட்டத்தின் போது கே.பாலபாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வந்த நிலையில், பேட்டியின் ஊடே சங் பரிவார் கும்பலைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஒரு பெண்ணை அழைத்து வந்து குழப்பம் விளை விக்க முயன்றார். அந்த பெண்ணையும், அந்த வழக்கறிஞரையும் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணும், அந்த வழக்கறிஞரும் நீதிமன்றத் திற்குள் ஓடிவிட்டனர்.  இந்நிலையில் போராட்டத்தின் போது குழப்பம் விளைவிக்க முயன்ற வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ராணி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலனிடம் மனு அளித்தார்.  ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் விளைவிக்க திட்டமிட்ட சதியாக இதை பார்க்கிறோம் என்று கே.பாலபாரதி தெரி வித்தார். எனவே, அந்த வழக்கறிஞர் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுதல் எஸ்.பி.யிடம் கே.பாலபாரதி கேட்டுக் கொண்டார்.         (நநி)