கோயம்புத்தூர், நவ. 16 – போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் கடந்த வாரம் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை யில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி நிர்வாகி சபரிபாலன் கைது செய்யப் பட்டார். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சஜீத் என்பவர் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை யில் ஈடுபட்டபோது காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கோவை நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குரு சந்திரவடிவேல் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
அப்போது அங்கி ருந்த மூவரை பிடித்து விசாரித்ததில் மூவரும் லாட்டரி சீட்டுகளை விற்ப னைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை காவல் நிலை யம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் மருதம் நகரை சேர்ந்த சஜீத், பூங்கா நகரை சேர்ந்த விக்னேஷ், சின்னவேடம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிட மிருந்து 25 லாட்டரி சீட்டுகள், செல்போன், வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் சஜீத் என்பவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வுக்காக 10 நாட் களாக முகாமில் தங்கி வேலை பார்த்ததாகவும் கூறப்படு கிறது. மேலும், அவர் தனது முக நூலில் ஆர் எஸ்எஸ் அமைப் பின் உடையை அணிந்த புகைப் படங்களை பகிர்ந்து ள்ளதும் தெரியவந்துள் ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி, போலி லாட்டரி விற்பனை செய்த விவகாரத்தில் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி சபரி பாலன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.