சென்னை, ஏப்.1- ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஒரு புறவழிச் சாலை, 23 சாலைகள் அகலப்படுத்தி மேம்பாடு செய்யவும், 5 ஆற்று பாலங்கள், 14 சிறுபாலங்கள் மற்றும் 9 இடங்களில் மழை நீர் வடிகால்கள் கட்டும் பணிகள் ரூ.1093 கோடியில் முதற் கட்டமாக மேற்கொள்ளப் படும் என்று சட்டப்பேர வையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை மானியக்கோரிக்கை மீது சனிக்கிழமை (ஏப்.1) விவா தம் நடைபெற்றது. முன்ன தாக கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, “பல்வேறு மாவட்டங் களிலுள்ள 17 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.104 கோடி செலவில் புதுப்பித்து, மறு சீரமைப்பு செய்து பாதுகாக் கப்படும்”என்றார். ரூ.482 கோடியில் கட்டடங்கள் பராமரிப்பு தமிழ்நாட்டிலுள்ள ஆளுநர் மாளிகை, தலை மைச் செயலகம், உயர்நீதி மன்றம், சட்டமன்ற உறுப்பி னர்கள் அலுவலகக் கட்டடங்கள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு கட்டடங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிக்காக ரூ.482 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம் நவீன மையம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய நூலகம், கலந்துரையாடல் வசதிகள், ஒலி-ஒளி காட்சி, உணவகம் மற்றும் பொதுமக்களுக் கான பிற வசதிகளுடன் கலை யரங்கம் நவீன முறையில் புதுப்பிக்கப்படும். ஜல்லிக்கட்டு அரங்கம் மதுரை மாவட்டம், கீழ்க்கரை கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடி செலவில் மூன்று அடுக்குகளுடன் 3,700 பேர் அமரும் இருக்கைகள், முக்கிய பிரமுகர்கள் இருக் கைகள், நுழைவு வாயில் அருங்காட்சியகம், காளை கொட்டகை, வாடிவாசல் என ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். திருப்பூர், நாகப்பட்டி னம், ராமநாதபுரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளுக்கு ரூ.409 கோடி செலவில் புதியதாக கட்டடங்களும் உதகமண்ட லம் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் ரூ.416.18 கோடியில் மருத்துவமனை, கல்லூரி மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் புதிய கட்டடம் கட்டும் பணி ரூ.125 கோடியில் மேற்கொள்ளப்படும்.
சென்னை, சைதாப் பேட்டை தாடண்டர் நகரில் ரூ.88.49 கோடியில் 190 பி வகை குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதே பகுதியில் ரூ.100 கோடியில் 190 சி வகை குடி யிருப்புகள் கொண்ட பன்மாடிக் கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும். மூன்று உப கோட்டம் பொதுப்பணித்துறை யின் நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்த மதுரையில் ஒரு பாரம்பரிய கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம் அமைக்கப்படும். இதே போன்று சென்னை, திருநெல்வேலி, வேலூர் என மூன்று உப கோட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் வேலு தெரி வித்தார். தொலை தூர சாலைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டு நர்களுக்காக மூன்று முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் ‘சாலையோர வசதி மையங் கள்’ பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப் படும். ஆறுவழிச் சாலைகள் அதிவேக விரைவுச் சாலை கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து முடித் திட ‘தமிழ்நாடு நெடுஞ் சாலை ஆணையம்’ புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கூறினார்.