tamilnadu

img

ரூ. 187 கோடியில் சுத்திகரிப்பு ஆலை

சென்னை, ஜூன், 13- சென்னை தலைமைச் செயலகத் தில் பல்வேறு திட்டப் பணிகளைத் முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வா யன்று (ஜூன் 13) தொடங்கி வைத்தார்.  அதன்படி, 34 மீட்பு மறுவாழ்வு வாகனங் களின் சேவை, காயமுற்ற வனஉயிரி னங்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க  புதிய வாகனங்களின் சேவைகளையும் தொடங்கி வைத்தார். அதேபோல் காலநிலை மாற்றத் துறை சார்பாக, தொழில் முதலீடு மற்றும் ஊக்குவிப்பு வர்த்தகத் துறை சார்பாக கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட் தொழில் பூங்காவிற்கு இரண்டு கட்டங்களாக 20 எம்எல்டி கொள்ளளவு கொண்ட மூன்றாம் நிலை எதிர்சவ்வூடு பரவல்  சுத்திகரிப்பு ஆலையை ரூ. 187.2 கோடி யில் நிறுவுவதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  20 எம்எல்டி கொள்ளளவு கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆலை மூலமாக நீர் மாசுபட்டு வெளியில் விடப்படுவது குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் அமைச்சர் மெய்யநாதன், துறையின் செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் பங்கு பெற்றனர்.