சென்னை,பிப்.12- காதலர் தினம் பிப். 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயம்பேடு சந்தையில் ரோஜா பூ விற்பனை களை கட்டத்தொடங்கி உள்ளது. காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம் பேடுக்கு வந்துள்ளது. காதலர்கள் ஒரு வருக்கொருவர் பரிசாக கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக 25 ரோஜா பூக்களை காம்புடன் கட்டி அதை அழகுபடுத்தி பூங்கொத்தாக விற்பனை செய்ய குவித்து வைத்துள்ளனர். இந்த ஒரு கட்டு ரோஜா வின் விலை ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வியா பாரி ஒருவர் கூறுகையில், ரோஜா பூ விற்பனை சூடுபிடிக்க ஆரம் பிக்கவில்லை. திங்கட்கிழமை முதல் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.