tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம், ஜூன் 8- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் வெளி நாடுவாழ் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் டாக்டர் மா.வள்ளலார் தலைமையில், மாவட்  டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணி கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட  ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தின விழா -பேரணி

இராஜபாளையம், ஜூன் 8- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பகமும், இராஜபாளை யம் ராஜுக்கள் கல்லூரியும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்தின. திருவில்லிபுத்தூர் வனச்  சரக அலுவலர் மனோரஞ்சிதம் தலைமை வகித்தார். ராஜுக்கள் கல்லூரி என்சிசி, என்எஸ்எஸ் மாணவ, மாணவி கள் பங்கேற்றனர். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி யில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரணி  விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊர்  பிரமுகர் ராமசுப்பிரமணியன், பள்ளி செயலாளர் பாலசுந்த ரம், நகர காவல் துறை அதிகாரிகள் துவக்கி வைத்தனர்.  உதவி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரன் நன்றி கூறி னார்.  அரிமா பள்ளி திருவில்லிபுத்தூர் அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள் சார்பில் அரிமா சங்கத்தின் தலைவரும் பள்ளி தாளாளருமான வெங்கடாசலபதி தலைமையில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

அரசு மேல்நிலைப் பள்ளியில்  போதைப்பொருள் எதிர்ப்பு முகாம்

இராமநாதபுரம், ஜூன் 8- இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிடம், அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  விழிப்புணர்வு முகாமில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்  பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விழிப்பு ணர்வு தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜ் தலைமை யில் நடைபெற்றது. போதைப் பொருட்கள் எதிர்ப்பு  ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்புரை யாற்றினார்.  நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார். உதவி தலைமை ஆசிரியர் மணி கண்டன் போதைப் பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள் / பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். சிறப்பு விருந்தினராக வழக்கறி ஞர் பிரின்ஸோ ரைமண்ட் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும்  அரசின் சட்டங்கள், வழக்குகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து வழிப்புணர்வை ஏற்படுத்தினார். போதை பொருட்கள் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெரோம்  ஆசிரியர் மாணவர்களுக்கு “Drugs Free TN” ஆண்ட்ராய்டு ஆப் எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார்.  நிறைவாக மாணவர்கள் அனைவரும் போதைப்  பொருட்கள் எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட னர். ஆங்கில ஆசிரியர் முத்து கருப்புசாமி நன்றி கூறி னார்.

இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சீதக்காதி தெருவில் தொழில் பிரமுகர் டைகர் சம்சுதீன் நேர்ச்சை எனப்படும் இறைச்சி வழங்கினார். நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மாமிச விருந்து அளித்து உபசரித்தனர்.

‘திருப்புவனம் பேருந்து நிலையத்துக்கு ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு’

மானாமதுரை, ஜூன் 8- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ.2.70 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு திருப்புவனம் பேரூராட்சி உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். திருப்புவனம் பேரூராட்சி  மன்றக் கூட்டம் தலைவர் த. சேங்கைமாறன் தலைமை யில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரஹமத்துல்லா கான், செயல் அலுவலர் சங்  கர் கணேஷ், வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்களை தலைமை எழுத்தர் நாகராஜன் வாசித் தார். இதைத் தொடர்ந்து, திருப்புவனம் பகுதி மக்க ளின் நீண்டகால கோரிக்கை யான நகர் பகுதியில் பேரு ந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தலைவர் சேங்கைமாறனுக் கும், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி ரூ.2.70 கோடி நிதி  ஒதுக்கீடு செய்த தமிழக அர சுக்கு பரிந்துரை செய்த தமி ழக கூட்டுறவுத் துறை அமைச்  சர் கே.ஆர்.பெரியகருப்ப னுக்கும் கூட்டத்தில் உறுப்பி னர்கள் நன்றி தெரிவித்தனர்.  அப்போது பேசிய தலை வர் சேங்கைமாறன், விரை வில் அடிக்கல் நாட்டப்பட்டு பேருந்து நிலையம் கட்டடப் பணி தொடங்கும் என்றார். கூட்டத்தில் திருப்பு வனம் பேரூராட்சி பகுதி களில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில்  பேவர் பிளாக் சாலை, மழை  நீர் வடிகால் ஆகிய பணி களை மேற்கொள்ள பொறி யாளர் வழங்கிய திட்ட  மதிப்பீடுக்கு அனுமதி உள்  ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளி புத்தாக்க திட்டத்தில் ரூ.1 லட்சம் வென்ற  சிவகங்கை மாவட்ட மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை, ஜூன் 8- பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத் தில் மாநில அளவில் முதலிடம் பெற்று ரூ.1  லட்சம் வென்ற அரசு பள்ளி மாணவிகளை தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டி னர். அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாண வர்களின் புத்தாக்க சிந்தனையை ஊக்கப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு  மற்றும் புத்தாக்க நிறுவனம், யுனிசெப் நிறு வனம் இணைந்து பள்ளிப் புத்தாக்க  மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்து கின்றன. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 9-ம்  வகுப்பு முதல் பிளஸ் 2 வரை என 2 பிரிவு களாக மாணவர்களின் புத்தாக்க கண்டு பிடிப்புகளுக்கு ரொக்க பரிசுகள் வழங் கப்படுகின்றன. நடப்பாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதூர் அருகே வலசைப்  பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து  2 கண்டுபிடிப்புகள் உட்பட வலசைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் மாணவி கள் முதலிடம் பிடித்தனர். 3 கண்டுபிடிப்புகள் மாநில போட்டிக்கு தேர்வாகின. மாநில போட்டிகள் கடந்த மே 24 முதல் மே 30 வரை மதுரை உள்ளிட்ட  6 இடங்களில் நடைபெற்றன. மதுரையில் நடந்த போட்டியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பிரிவில் வலசைப் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி கள் வனிதா, சா.தனலெட்சுமி, பெ.தன லட்சுமி, சர்மிளா, திவ்யதர்ஷினி ஆகியோர்  கண்டுபிடித்த சப்பாத்திக்கள்ளி பழங்களில்  இருந்து பக்கவிளைவு இல்லாத நிறமிக்கு முதலிடம் கிடைத்தது. சப்பாத்திக்கள்ளி பழச்சாறு மூலம்  பேனா மை, உதட்டுச் சாயம், நிறமூட்டி கள், முகப்பூச்சு களிம்பு, அழகு சாதனப்  பொருட்கள், குளிர்பானங்கள் போன்ற வற்றை உருவாக்கி காட்டினர். இவர் களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. மாணவிகளை தலைமை ஆசிரி யர் கண்ணப்பன் மற்றும் பள்ளி மேலா ண்மை குழுவினர், ஆசிரியர்கள் பாராட்டி னர். மாணவ மாணவிகளை கூட்டுற வுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பாராட்டினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு ஒத்திவைப்பு

விருதுநகர், ஜூன் 8- தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2006 - -2011  ஆட்சி காலத்தில்  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு  மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத் தில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசா ரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டி லிருந்து சிறப்பு நீதிமன்றம் அவரை வழக்கி லிருந்து விடுவித்தது. இந்நிலையில்,   சிறப்பு நீதிமன்ற உத்த ரவை ரத்து செய்து மீண்டும் முதலில் இருந்து  வழக்கினை தினமும் விசாரிக்க சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் உத்தரவிட்டார். மேலும் அதில், இந்த வழக்கினை மறு ஆய்வு செய்தும் உத்தர விட்டிருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து அமைச்சர்  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. உச்சநீதிமன்றம்  இடைக்கால தடை வழங்கியது. இருந்த போதும்,  திரு வில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த  வழக்கு பட்டியலிடப்பட்டு வாய்தா போடப்  பட்டு வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தடை  உத்தரவு தொடர்வதால் வழக்கின் விசார ணையை, ஜூலை 11 ஆம்  தேதிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் ஒத்திவைத்தார்.

வனத்துறையினரின் தடையால் சாலை பணி நிறுத்தம்

 ஒன்றியம் வருசநாட்டில் இருந்து வாலிப்பாறை வரையில் வனத்துறையினரின் தடை காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.  மேலும் தர்மராமராஜபுரம்-செல்வராஜபுரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட  நபார்டு திட்டத்தின் கீழ் அரசு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது பாலம் கட்டுவதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.  அதேபோல தாழையூத்து கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லபுரம் மலைச்  சாலையை சீரமைக்க வேண்டும். காமராஜபுரத்திலி ருந்து விருதுநகர் மாவட்டத்தை இணைக்கும் கிழவன் கோவில் சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சனியன்று தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங்  கடமலை-மயிலை ஒன்றியத்தில் வனத்துறையினர் தடையால் பாதிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு  மேற்கொண்டார். மல்லபுரம் மலைச்சாலை, தர்மராஜ புரத்தில் பாலம் கட்ட தடை விதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் தடை விதிக்கப்பட்ட காரணம் பணிகளை தொடர மாவட்ட நிர்வாகம் தரப்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார்.  அதேபோல காமராஜபுரத்திற்கு சென்ற ஆட்சியர்  கிழவன் கோவில் சாலை திட்டத்தை தொடங்க அரசு சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.  மொட்டைப்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டி ருந்த போது இந்த சாலை வழியாக நாள்தோறும் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதாகவும், சாலை அமைக்கப்படாத பகுதிகள் அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.  இதையடுத்து ஏற்கனவே 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் சாலையை புதுப்பிக்க ஏன்  தடைவிதிக்கிறீர்கள்? தடையால் பொதுமக்கள் அன்றா டம் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர் என வனத்துறை யினருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலைகளை அமைக்க  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ரூ.1.50 கோடி க்கு மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது அதற்கான மதிப்பீடு ரூ.3.50 கோடியாக உயர்ந்துள்ளது.‌  அதேபோல தர்மராஜபுரத்தில் பாலம் கட்டுவதற்கான மதிப்பீடும் அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு வீண் நிதி இழப்பீடு ஏற்படுகிறது. ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.