tamilnadu

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அவசியம்!

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அவசியம்!

பெ. சண்முகம் வலியுறுத்தல்

மதுரை, மே 5 - மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கிரானைட் கொள்ளை தொடர் பாக, ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயம் மேற் கொண்ட விசாரணையின் முக்கியத்து வத்தையும், அவருக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத் தலையும் முன்னிறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் ஞாயிறன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற மாபெரும் கிரானைட் கொள்ளை குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்  சகாயம் ஐஏஎஸ் அவர்கள் தனது உயிரைப்  பணயம் வைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக் காலத்திலேயே அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தலும் மிரட்டலும் இருந் தது. இதனால் அவருக்கு ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், இன்னமும் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அந்த  பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றது மிக வும் தவறான முடிவு,” என்று குறிப்பிட் டிருந்தார். மேலும், “இந்த வழக்கு இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், முக்கிய விசா ரணை அதிகாரியாக இருந்த சகாயத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்குவது தமிழ்நாடு அரசின் பொறுப்பு. எனவே, அரசு காலம்  தாழ்த்தாமல் அவருக்கு மீண்டும் ஆயுதம்  தாங்கிய காவலர் பாதுகாப்பை வழங்க  முன்வர வேண்டும்,” என்றும் வலியுறுத்தி யிருந்தார். இதனிடையே, முன்னாள் ஐஏஎஸ் அதி காரி சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு அளிக்க வில்லை என்று மதுரை மாவட்ட சிறப்பு நீதி மன்றம், தமிழக காவல்துறைக்கு திங்க ளன்று கேள்வி எழுப்பிய நிலையில், சகாயத் திற்கு பாதுகாப்பு அளிக்கத் தயார் என்று  தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. அப்போது, சகாயத்துக்கு உரிய  பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய பாது காப்புப் படை பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை

2024 ஜூலை மாதம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. ஜோதிமணி தலைமை யிலான உயர்மட்ட சிறப்பு குழு, மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிரானைட் குவாரி களில் நடைபெற்ற மீறல்கள் குறித்த அறிக் கையை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. ஆனால், இந்த வழக்கு இன்னமும் முழு மையாக முடிவுக்கு வரவில்லை.