மதுரை, ஜூன் 28- மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலமங்களம் ஊராட்சி முதலாவது வார்டு பகுதியின் விரி வாக்க பகுதியில் உள்ள (ஊரணி அரு கில்) இரண்டு தெருக்களில் இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் இல்லை. கழிவு நீர் வாய்க்கால் கட்டுவதைத் தான் கேள் விப்பட்டிருக்கிறோம். அதற்கு மாறாக பெரிய சிமெண்ட் உறைகளை பூமிக்குள் இறக்கி அதில் கழிவு நீரை சேகரிக்கும் நூதன முறையை மேற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டு பிடித்துள்ளது. மழை காலத்தில் தொட்டி யிலிருந்து கழிவு நீரை அகற்றுவது இய லாத காரியம். “உறை இறக்கும்” நூதன கண்டுபிடிப்பின் நிலத்தடி நீர் மாசுபடும், தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதே சரி யாக தீர்வாக அமையும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குலமங்களம் கிளை சார்பில் ஊராட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட் டது. ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.தன பாலன், சுல்தான் அலாவுதீன், திருப்பதி, எம்.செந்தில் வேல், ராம்ராஜ், செல்வராஜ் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.